விவசாயி தற்கொலை

விழுப்புரம்: செஞ்சி அருகே குடும்ப பிரச்னையில் விவசாயி துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

செஞ்சி அடுத்த சிறுகடம்பூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் முருகன், 55; இவரது மகள் அமுல்பிரியா, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் அதே கிராமத்தில் ஒருவரை திருமணம் செய்து வசித்து வந்தார்.

குடும்ப பிரச்னையில் அவர் பிரிந்து வந்து, கடந்த 2 மாதங்களாக தந்தை வீட்டில் தங்கியிருந்தார்.

மகளின் நிலை குறித்து விரக்தியில் இருந்த முருகன், நேற்று முன்தினம் வீட்டின் அருகே உள்ள மா மரத்தில் துாக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

புகாரின் பேரில், செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement