இயக்குனர் பாக்யராஜ் காலமானார்: திரையுலகம் அதிர்ச்சி
சென்னை: பிரபல நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மாரடைப்பு ஏற்பட்டு சென்னையில் இன்று (ஜூன் 27) காலை காலமானார். அவருக்கு வயது 73.
தமிழ் திரையுலகின் புகழ்பெற்ற இயக்குநர், நடிகர், திரைக்கதை எழுத்தாளர் மற்றும் தயாரிப்பாளர் பாக்யராஜ். இவர், 75-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். தனித்துவமான கதைக்களம் மற்றும் நகைச்சுவையுடன் கூடிய குடும்பத் திரைப்படங்களை உருவாக்குவதில் மிகவும் பிரபலமானவர். கோவாவில் நடந்த நடிகை குஷ்புவின் மகள் அவந்திகாவின் திருமணத்தில் பங்கேற்றுவிட்டு நேற்று இரவு தான் சென்னை திரும்பி உள்ளார் பாக்யராஜ்.

பயோ டேட்டா!
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே உள்ள வெள்ளாங்கோயிலில் 1953ம் ஆண்டு ஜனவரி 7ம் தேதி பிறந்தவர் பாக்யராஜ். தமிழ்த் திரையுலகில், நடிகர், வசன எழுத்தாளர் , இயக்குநர், தயாரிப்பாளர், பத்திரிகையாளர் எனப் பன்முகம் கொண்டவர். ஆரம்பத்தில் புகழ்பெற்ற இயக்குநர் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார்.
1979ம் ஆண்டு சுவரில்லாத சித்திரங்கள் திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். இவருக்கு மனைவி பூர்ணிமா, மகன், மகள் உள்ளனர். நலமாக இருந்த பாக்யராஜ் இன்று திடீரென மாரடைப்பால் உயிரிழந்தது திரையுலகினர் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முதல்வர் விஜய் இரங்கல்
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள பதிவில், ''தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர், வசனகர்த்தா, இசையமைப்பாளர் என பன்முகத் திறமையால் முத்திரை பதித்த பாக்யராஜ் மறைந்த செய்தியறிந்து மிகுந்த அதிர்ச்சியும், ஆழ்ந்த வேதனையும் அடைந்தேன். தனித்துவமான கதையாக்கம், நகைச்சுவை கலந்த நடிப்பு, கிராமிய வாழ்வியல் மற்றும் குடும்ப உறவுகளின் ஆழமான உணர்வுகளை பிரதிபலிக்கும் திரைப்படங்கள் மூலம் தமிழ் மக்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த பாக்யராஜின் பங்களிப்பு தமிழ்த் திரைப்பட உலகிற்கு அளப்பரியதாகும்.
அவரது ஒவ்வொரு படைப்பும் பொழுதுபோக்கோடு, மனிதநேயம் மற்றும் சமூக விழுமியங்களை பேசும் காலத்தால் அழியாத நினைவுகளாக என்றும் நிலைத்திருக்கும். அவரது மறைவு தமிழ்த் திரையுலகிற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், திரைத்துறையினருக்கும் மற்றும் ரசிகர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா இறைவன் திருவடியில் இளைப்பாற பிரார்த்திக்கிறேன். திரைத்துறையில் பாக்யராஜின் பங்களிப்பைப் போற்றி, அஞ்சலி செலுத்தும் வகையில் அவரது இறுதிப் பயணத்திற்கு அரசு மரியாதை வழங்கப்படும். இவ்வாறு முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
பாக்யராஜ் கண்கள் தானம்
பிரபல இயக்குநரும், நடிகருமான பாக்யராஜ் இன்று காலையில் வழக்கம் போல் வாக்கிங் சென்ற போது நெஞ்சுவலி ஏற்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். பாக்யராஜ் தனது கண்களை தானம் செய்வதாக ஏற்கனவே கூறியிருந்தார்.
அவர் மறைந்ததையடுத்து அவரின் கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. மருத்துவ குழுவினர் வந்து அதற்கான பணிகளை மேற்கொண்டு கண்களை தானமாக பெற்று சென்றனர்.
@block_Y@
பாக்யராஜ் மறைவுக்கு முதல்வர் விஜய், திமுக தலைவர் ஸ்டாலின், மத்திய அமைச்சர் எல்.முருகன்,
அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ், தமிழக காங்., தலைவர் செல்வபெருந்தகை, தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
block_Y
அரசு மரியாதை
இயக்குனர் பாக்யராஜ் உடலுக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்தார். பாக்யராஜ் உடல் நாளை (ஜூன் 28) மதியம் 1.30 மணிக்கு சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட உள்ளது.
பெற்ற விருதுகள்
* 'முந்தானை முடிச்சு' (1983) திரைப்படத்திற்காக பிலிம்பேர் சிறந்த நடிகர் விருது
* 'புதிய வார்ப்புகள்' (1979) திரைப்படத்திற்காக சிறந்த வசன எழுத்தாளருக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருது
* சீமா (SIIMA) வாழ்நாள் சாதனையாளர் விருது
மேலும் படிக்க...
திரையுலகில் அடுத்த அதிர்ச்சி; இயக்குநர் பாக்யராஜ் காலமானார். இது தொடர்பாக தினமலர் சினிமா பக்கத்தில் செய்தி வெளியிடப்பட்டு உள்ளது.
படிக்க இங்கே கிளிக் செய்யவும்
வீடியோ பார்க்க...
நடிகரும், இயக்குனருமான பாக்யராஜ் மரணம் குறித்து தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
ஓம் ஷாந்தி
திரைப்பட உலகம் மட்டுமா அதிர்ச்சி, நாங்கள் எல்லோரும் கூடத்தான். என்ன ஒரு படைப்பாளி, வசனகர்த்தா, இயக்குநர், நடிகர், கதையாசிரியர். என்னால் சுத்தமாக நம்ப முடியவில்லை. ஒரு 15 நாட்கள் முன் இயக்குநர் இமயம், இப்போ இவர். சே!! அன்னார் ஆன்மா சாந்தி பெற வேண்டுகிறேன், அவரை கொண்டு போன இறைவனிடம்.
கவிதைகளுக்கு கவி சக்கரவர்த்தி கம்பன் போல் தமிழக திரைப் பட உலகின் வெள்ளி திரை சக்கரவர்த்தி கே பாக்யாராஜ் மறைவு பெரிழப்பு
அன்னாரின் ஆன்ம சாந்தி அடைய பிராத்திப்போம். தன் உடலை கவனிக்காமல் விட்டுட்டாரா?. நல்ல மனிதர். பாரதி ராஜா, பாக்கியராஜ் ... சகுனம் சரியில்லையெ...
இந்திய திரை உலகின் ஆகச்சிறந்த நம்பர் 1 ஸ்க்ரிக்ட் ரைட்டர் என்பதில் எவருக்குமே மாற்றுக்கருத்து இருக்க வழியில்லை. அவருக்கு இணையான பிற படைப்பாளிகளின் திரைக்கதையில் ஏதேனும் ஒரு காட்சியாவது தொய்வானதாக.. பழுதானதாக அமைந்திருக்கும். ஆனால் பாக்யராஜ் திரைக்கதையில் காட்சிகளிலோ கதையோட்டத்திலோ துளிக்கூட பிசிறோ தொய்வோ இருக்கவே இருக்காது.
ஆழ்ந்த இரங்கல்.
என்னதான் தனக்கு பிரியமான குருஜியாக இருப்பினும் இப்படியா அவசரமாக பாரதிராஜாவைத் தேடி போயிருக்கணும் எனும் கண்ணீரை தவிர்க்க இயலவில்லை.
குரு பாரதிராஜா இறந்து 17வது நாள் சிக்ஷ்யன் பாக்யராஜ் இன்று மறைவு
ஓம் ஷாந்தி
குசும்பு பிடித்த நடிகர், இயக்குனர். இவரது படங்களில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத ஒரு சம்பவத்தை செய்வார். அது செம்ம காமெடியாகி பெரும் சிரிப்பலையை உண்டாக்கும். குசும்பு நிறைய.... இறப்பு எல்லோருக்கும் பொதுவானதுதான். நல்ல ஆரோக்கியமாக இருப்பவர்கள் திடீரென்று மறையும்போது கொஞ்சம் அதிர்ச்சியை ஏற்படுத்திவிடுகிறது. அவரது ஆத்மா சாந்தி அடையட்டும்.
மறைந்த திரு.பாக்யராஜ் ஒரு சிறந்த இயக்குனர் மற்றும் திரைக்கதாசிரியர். தமிழ் திரையுலகிற்கு நல்ல பொழுதுபோக்கு படங்களை அளித்தவர்.தனித்துவமான குரலுக்கு சொந்தக்காரர். ஹிந்தியும் ஆங்கிலமும் பெரிதும் தெரியாமல் ஒரு ஹிந்தி ஹிட் கொடுத்தவர். மக்கள் திலகத்தின் பேரன்பை பெற்றவர். மௌன கீதங்கள், டார்லிங் டார்லிங் டார்லிங், சுவர் இல்லாத சித்திரங்கள் இன்று போய் நாளை வா, தாவணிக்கனவுகள், முந்தானை முடிச்சு போன்ற சிற்ந்த பொழுதுபோக்கு வெற்றிப்படங்களைத் தந்தவர். இசையமைக்கவும் செய்தார். தன் குருநாதர் சென்ற சில தினங்களிலே அவரை தொடர்ந்து சென்றுவிட்டார். தமிழ் திரையுலகிற்கு ஒரு பேரிழப்பு. அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவருடைய திரைப்படங்கள் அனைத்தும் நல்ல பொழுதுபோக்கு படங்கள். கதை, வசனம், நகைச்சுவை என்று எல்லாம் கலந்து டைம் போவதே தெரியாமல் படம் செல்லும். அன்னாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்கள். அன்னாரின் ஆன்மா சாந்தியடையட்டும். ஓம் ஷாந்தி.மேலும்
-
மதங்களை கடந்த மனிதநேயம்; ஆர்எஸ்எஸ் நிர்வாகி உடலுக்கு இறுதிச்சடங்கு செய்த முஸ்லிம் பெண்
-
டாஸ்மாக் கடை அருகே வாட்டர் பாட்டில் ஸ்நாக்ஸ் விற்ற 4 பேர் மீது வழக்கு
-
மதுபாட்டில் விற்ற இருவர் கைது
-
திருக்கோவிலுார் உலகளந்த பெருமாள் கோவிலில் 5ம் தேதி கும்பாபிஷேகம்
-
பெருமாளுக்கு புதிய கவசம் சாத்தி வழிபாடு
-
மூணாறில் பருவ மழை குறைவால் குடிநீர், மின்சாரம் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பு