சிலிண்டர், ரேஷன் அரிசி பறிமுதல் 2 பேரை சுற்றிவளைத்த போலீஸ்

சேலம்: சேலம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார், இடைப்பாடி அருகே ரங்கம்
பாளையத்தில் உள்ள பேக்கரியில் நேற்று சோதனை நடத்தினர்.


அப்போது வணிக சிலிண்டருக்கு பதில், வீட்டு உபயோக சிலிண்டரை பயன்படுத்தி, பேக்கரி பொருட்கள் தயாரிப்பதை கண்டுபிடித்தனர். தொடர்ந்து, 4 சிலிண்டர்களை பறிமுதல் செய்து, கடை உரிமையாளரான, தங்காயூரை சேர்ந்த செல்வராஜ் மனைவி பூங்கொடி, 54, என்பவரை கைது செய்தனர்.முன்னதாக நேற்று முன்தினம், இரும்பாலை அருகே கொல்லப்பட்டி, வட்டமுத்தாம்பட்டியில், ஆனந்தன், 39, என்பவரது வீடு அருகே, 50 கிலோ அளவில், 4 மூட்டைகளில் இருந்த, 200 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர். பதுக்கி வைத்ததாக ஆனந்தன் வாக்குமூலம் கொடுத்தார். அவரை, போலீசார் கைது செய்தனர்.

Advertisement