மூதாட்டியிடம் 2 பவுன் பறிப்பு பைக்கில் தப்பியோருக்கு வலை

பனமரத்துப்பட்டி; சேலம், இரும்பாலையை சேர்ந்தவர் மணி, 52. இவர் கடந்த, 24ல், சந்தியூரில் நடந்த உறவினர் வீட்டு திருமண விழாவுக்கு சென்றார். அன்றிரவு, 8:50 மணிக்கு, சேலம் - நாமக்கல்

நெடுஞ்சா-லையின் எதிரே செல்ல, இருள் சூழ்ந்திருந்த சிறு பாலம் வழியே சென்றார். அப்போது மர்ம நபர், மணி அணிந்திருந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்தார். மணி இறுக்கி பிடித்துக்-கொண்டதால், அவரது கையில், 2 பவுனும், மர்ம நபரின் கையில், 2 பவுனும் சென்றது. உடனே மர்ம நபர், சற்று தள்ளி தயாராக காத்திருந்த மற்றொருவரின் பைக்கில் ஏறி தப்-பினார். இதுகுறித்து மல்லுார் போலீசார் விசாரிக்-கின்றனர்.

Advertisement