ரூ.3 லட்சம் குட்கா கடத்திய இருவர் கைது
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் அருகே டி.வி.எஸ்., சோதனைச்சாவடியில், மத்திகிரி ஸ்டேஷன் போலீசார் நேற்று மாலை வாகன சோதனை செய்தனர். அப்போது, அவ்வழியாக வந்த ஈச்சர் லாரியை நிறுத்தி சோதனை செய்தபோது, கர்நாடகா மாநிலம், பெங்களூரு எலக்ட்ரானிக் சிட்டி பகுதியிலிருந்து, திருச்சிக்கு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை கடத்தி செல்வது தெரிந்தது.
இதனால், லாரி டிரைவர்களான திருச்சி முசிறி பகுதியை சேர்ந்த சுந்தரமூர்த்தி, 28, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த ராமசாமி, 23, ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும், 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஒரு டன் புகையிலை பொருட்கள் மற்றும் லாரியை பறிமுதல் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை
-
பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
-
இன்னும் இருக்கு இலக்குகள்: ஜூடோவில் சாதித்த சக்தி
-
நண்பர் பிரதமர் மோடியை வரவேற்பதில் பெருமை கொள்கிறேன்: ஆஸி பிரதமர் அல்பானீஸ் மகிழ்ச்சி
-
அதிக மழைப்பொழிவு எங்கே?
-
மிஸ்டர் மூளைக்காரன் 'அப்பா' வின் மவுன ராகம்!
Advertisement
Advertisement