பைனான்ஸ் அதிபரை மிரட்டி பணம் பறிக்க முயற்சி: இருவர் கைது
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் தம்பிபட்டியைச் சேர்ந்த பைனான்ஸ் அதிபர் வடிவேல் (40). இவரை கடந்த ஜூன் மாதம் கைபேசி மூலம் தொடர்புகொண்ட 'கவிதா' என்ற பெண், நயமாகப் பேசி பழகியுள்ளார். தனக்கு அவசரமாகப் பணம் தேவைப்படுவதாகக் கூறி கடந்த ஜூன் 9ம் தேதி வடிவேலிடமிருந்து ஜிபே மூலம் ரூ.4,500 வாங்கியுள்ளார்.
இதன் தொடர்ச்சியாக, கடந்த ஜூன் 24-ஆம் தேதி வடிவேலை காரைக்குடிக்கு வரவழைத்த அந்தப் பெண், தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி பழைய ஓட்டு வீடு ஒன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு திட்டமிட்டபடி மறைந்திருந்த கும்பல் வடிவேலை வலுக்கட்டாயமாக நிர்வாணமாக்கி, கொடூரமாகத் தாக்கி ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியுள்ளது. மேலும், அவரிடமிருந்த ஹோண்டா இருசக்கர வாகனத்தையும் செல்போனையும் பறித்துச் சென்றுள்ளது.
இச்சம்பவம் குறித்து வடிவேல் காரைக்குடி வடக்கு காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காரைக்குடி புதிய பேருந்து நிலையம் மற்றும் 50 க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்து இந்த குற்றவாளிகளை கண்டறிந்து முதல் குற்றவாளியான கவிதா மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரை போலீசார்
கைது செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள மற்ற 3 நபர்களை போலீசார் தொடர்ந்து தேடி வருகின்றனர்.
50 லட்சம்? இந்த மூஞ்சி. ம்.ஹூம்.
ஆரூரார் சொல்வது சரி! ஐம்பது ரூபாய்க்கு கூட ஒர்த் இல்லை! பெண்கள் மீது எனக்கு மதிப்பு உண்டு! இதுபோன்ற ஃபிராடு கேசுகளைப் பார்த்ததும் கோபம்தான் வருகிறது!
தனிமையில் இருக்கலாம் என ஆசை வார்த்தை கூறி ...பைனான்ஸ் அதிபரின் இந்த சபலம் தான் போய் மாட்டிக்கொண்டதற்கு காரணம்.
ரொமான்ஸ் ஸ்கேம்கள் அதிகமாகிவிட்டன ........மேலும்
-
சூடாமணிபுரத்தில் மேய்ச்சல் நிலமான பூங்கா
-
தென்மாப்பட்டில் மாாட்டு வண்டி பந்தயம்
-
ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
-
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள்; 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு