தமிழை நெஞ்சில் சுமந்து வாழும் பண்பு தொடர வேண்டும்: அண்ணாமலை
சென்னை: உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும் என 'வீ தி லீடர்ஸ்' அமைப்பின் தலைவர் அண்ணாமலை வலியுறுத்தி உள்ளார்.
அவரது அறிக்கை: வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவையும் (பெட்னா), நியூஜெர்சி தமிழ்ப் பேரவையும் இணைந்து நடத்திய 39வது தமிழ் விழாவில் பங்கேற்று, தமிழ் வம்சாவளியினருடன் நேரில் சந்தித்து உரையாடியது, மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லைகளைக் கடந்து, தமிழின் மீதான அவர்களின் அன்பும், பற்றும், அர்ப்பணிப்பும் பெருமைக்குரியது.
தமிழ் மொழி, பண்பாடு, அடையாளம் ஆகியவற்றை அடுத்த தலைமுறைக்கும் உயிர்ப்புடன் கொண்டு செல்லும் இது போன்ற முயற்சிகள், உண்மையிலேயே பாராட்டத்தக்கவை. உலகின் எந்த மூலையில் வாழ்ந்தாலும், தமிழ் மொழியை நெஞ்சில் சுமந்து வாழும் இந்தப் பண்பு என்றும் தொடர வேண்டும்.
@twitter@https://x.com/annamalai_k/status/2073601341998665758?s=20 twitter
அன்போடும், உற்சாகத்தோடும் என்னை வரவேற்று, இனிய நினைவுகளைப் பரிசளித்த வட அமெரிக்க தமிழ்ச்சங்கப் பேரவைக்கும், நியூஜெர்சி தமிழ்ப் பேரவைக்கும், விழாவில் பங்கேற்ற ஒவ்வொரு தமிழ்ச் சொந்தத்துக்கும், என் மனமார்ந்த நன்றிகள். தமிழால் இணைவோம், தமிழால் உயர்வோம். இவ்வா அண்ணாமலை கூறியுள்ளார்.
வீடியோ பார்க்க...
அண்ணாமலை பேசிய வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
சீமானே தேவல..
சரிங்க தம்பி எப்ப தமிழ்நாடு விஜயம். #wetheleader அமைப்பு வெறும் கொங்கு நாட்டைதான் சார்ந்து இருக்கிறது என்று நினைக்கிறேன். மற்ற பகுதிகளை கண்டு கொண்ட மாதிரி தெரியவில்லை. நீங்கள் பாஜகவில் இருந்து விலகி கொடுத்த முதல் நேர்காணல் அன்று ஒரு அலை வீசியதை மறுப்பதற்கு இல்லை, ஆனால் அது மெல்ல பிசுப்பிசுத்து போகிறதோ என்று எனக்கு தோன்றுகிறது.
All nonsense.
Wheres Tamil.
You are still studying higher education like IT, ENGINEERING AND MEDICINE ETC IN ENGLISH ONLY.
IMPLEMENT TAMIL LANGUAGE IN EVERY EDUCATION RIGHT FROM LKG TO TO THE HIGHEST EDUCATION.
STOP PLAYING POLITICS WITH THE LANGUAGE.
DEVLOP YOUR NATIVE LANGUAGE INSTEAD OF ENGLISH.
79 YRS OVER AFTER GETTING INDIPENDENCE.
WAKE UP.
தமிழை நெஞ்சில் சுமப்பதை விட தமிழ் பண்புகளோடு இருக்க வேண்டும். ஒழுக்கம் இல்லாதவன் எவனும் தமிழனல்ல
தமிழ், மத சார்பற்ற என்று பேசுவதால் அடையாளம் போன அண்ணாமலை...இவரை அரசியல் கருவாக உருவாக்கிய பஜக ஹிந்துத்துவா சித்தாந்தத்தை பகைத்து கொண்டு பண்புகளை தொலைத்து. பத்தோடு பதின் ஒன்றாக அலைகிறார்...தாடி வளர்த்து பெரியாரால் ஆக வேண்டியதுதான்
மோடி பேசிய நன்றி உரை வெளியிடுவது மாதிரியே இவரது நன்றி உரை பேச்சைக் கூட பத்திரிக்கையில் வெளியிட்டாச்சு. ஒரு அளவுதான் மற்றவர்கள் பூஸ்ட் பண்ணி விட முடியும். இவர்தான் அதைப் பிடிச்சு மேலே வரணும். அமெரிக்கா சென்று பேசும் வழ, வழா, கொல, கொலா பேச்சுகள் எல்லாம் தமிழ்நாட்டு அரசியல் ஆசைக்கு உதவாது.
தினமலர் மட்டும் தான் இவர இன்னும் சுமக்குது..
தமிழ், தமிழினம் என்பதெல்லாம் பிழைப்பு அரசியலாகிவிட்டது. முதலில் எல்லோரும் தமிழ் என்பதை சரியாக உச்சரிக்கப் பழக்குங்கள்.
நீங்க மட்டும் எல்லா மொழியும் பேசலாம் மற்றவருக்கு தமிழ் மட்டும்
தமிழ்