பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன்: பிரதமர் மோடி
புதுடில்லி: குஜராத்தில் செமிகண்டக்டர் ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூகவலைதளத்தில் பிரதமர் மோடி பகிர்ந்துள்ளார். அவர் பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
குஜராத் - சனந்த் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள சிஜி செமி நிறுவனத்தின் செமிகண்டக்டர் ஆலையை திறந்து வைத்த பிரதமர் மோடி பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்திய செமிகண்டக்டர் திட்டத்தின் கீழ், மத்திய அரசால் முதற்கட்டமாக ஒப்புதல் அளிக்கப்பட்ட 4 முக்கிய திட்டங்களில் இதுவும் ஒன்றாகும். இந்த அதிநவீன ஆலை ரூ.7,500 கோடி முதலீட்டில் கட்டப்பட்டுள்ளது.
இந்த ஆலையில் பணிபுரியும் பெண்களுடன் கலந்துரையாடிய வீடியோவை சமூக வலைதளத்தில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: சனந்தில் உள்ள செமிகண்டக்டர் ஆலையின் திறப்பு விழாவின் மிகச் சிறப்பான தருணங்களில் ஒன்று, அங்கு பணிபுரியுபவர்களுடன் உரையாடக் கிடைத்த வாய்ப்பாகும். அங்கு பணிபுரியும் ஊழியர்களில் பெரும்பான்மையானோர் பெண்கள்.
அவர்கள் இந்தியாவின் தொலைதூரப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள்; அவர்களில் பலர் பழங்குடியினப் பின்னணியைக் கொண்டவர்கள். ஆனால், அவர்களின் குறிப்பிடத்தக்க மன உறுதி, அவர்கள் செமிகண்டக்டர் பற்றி கற்று அறிவதை உறுதி செய்தது. அவர்கள் பயிற்சிக்குச் சென்று, இன்று இந்தியாவின் செமிகண்டக்டர் துறையில் மேலும் வலு சேர்க்கிறார்கள். பெண் சக்தியைக் கண்டு பெருமிதம் கொள்கிறேன். இவ்வாறு பிரதமர் மோடி கூறியுள்ளார்.
இந்த போட்டோவில் இருக்கும் பெண்களை பார்த்தால், இவர்கள் பொறியியல் பட்டம் பெற்ற தமிழ் பெண்கள் போல இருக்கிறார்கள்.
மோடி தலைமையில் நிகழும் இந்த செமிகான் ஆலைகள் திறப்பு இந்தியாவால் மறக்கப்பட்ட இந்த தொழிலை இன்றைய இளைஞர்களை நினைத்துப்பார்க்க முடியாத புது உயரத்திற்கு எடுத்து செல்கிறது. உழைத்த அனைவருக்கும் பாராட்டுக்கள்.
அப்படியா?
எல்லோ பக்கமும் பெண்களுக்கு தான் மதிப்பும் மரியாதையும் இருக்கிறது ஆண்களின் நிலைமை பரிதாபகரமாக அவல நிலையில் உள்ளதுமேலும்
-
சூடாமணிபுரத்தில் மேய்ச்சல் நிலமான பூங்கா
-
தென்மாப்பட்டில் மாாட்டு வண்டி பந்தயம்
-
ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
-
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள்; 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு