குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுக தான்; எங்களுக்கு அந்த அவசியமே இல்லை என்கிறார் செங்கோட்டையன்
ஈரோடு: குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுக தான்; எங்களுக்கு அந்த அவசியமே இல்லை என தவெக மீது குதிரை பேர குற்றச்சாட்டை வைத்து அடுத்தடுத்து கவர்னர் சந்தித்த பாஜக, திமுக, அதிமுகவுக்கு அமைச்சர் செங்கோட்டையன் பதிலடி கொடுத்தார்.
ஈரோட்டில் நிருபர்களிடம் செங்கோட்டையன் கூறியதாவது: என்னை பொறுத்தவரை இந்த குதிரை பேரத்தை உருவாக்கியதே திமுகதான். ஜெயலலிதா இருந்த காலத்தில், நாங்கள் எதிர்க்கட்சியாக இருக்கிற போது, மதிமுகவை சேர்ந்த ராமகிருஷ்ணனை ராஜினாமா செய்ய வைத்து திமுகவில் இணைத்தனர். பிறகு மீண்டும் திமுகவில் போட்டியிடுவதற்கு வாய்ப்பை அளித்தனர்.
அனிதா ராதாகிருஷ்ணன் அதிமுகவில் இருந்தவர். அவரையும் அதை தான் செய்தனர். குதிரை பேரத்தை முதல் முதலில் உருவாக்கிய நிலை திமுகவுக்கு தான் இருக்கிறது. எங்களுக்கு அந்த நிலை இல்லை. குதிரை பேரம் என்பது எனக்கு புரியவில்லை. எல்லோரும் குதிரை பேரம் என்கிறார்கள். ஆகவே அதற்கு வேறு பொருள் தமிழகத்திற்கு தேடி கொண்டு இருக்கிறோம்.
எப்படி அதற்கு பதில் சொல்ல வேண்டும் என்பதற்கு தேடிக்கொண்டு இருக்கிறோம், அது கிடைத்தால் அதற்கான பதில் சொல்லப்படும். குதிரை பேரம் பேச வேண்டிய நிலை இல்லை. நாங்கள் இன்றைக்கு வலிமையாக ஆட்சி அமைத்து இருக்கிறோம், எங்கள் கூட்டணி வலிமையான ஆதரவை தந்து இருக்கிறது. இன்றைக்கு அமைச்சரவையில் காங்கிரஸ், விசிக முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளுக்கும் இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சிகள் நாங்கள் வெளியில் இருந்து ஆதரவு தருகிறோம் என்று சொன்னார்கள். குதிரை பேரத்திற்கே வேலை இல்லை. வலிமையான, நேர்மையான ஆட்சி, தமிழ் மக்கள் அனைவரும் விரும்பிய ஆட்சி நடக்கிறது. 96 பேர் கொண்டு மைனாரிட்டி ஆட்சி நடத்தியவர்களுக்கு தான் குதிரை பேரம் தேவை. எங்களுக்கு தேவை இல்லை. இவ்வாறு செங்கோட்டையன் கூறினார்.
தினமலர் நேரலை; வீடியோ பாருங்கள்!
ஈரோட்டில் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர் சந்திப்பு; தினமலர் வெப்சைட் மற்றும் யூடியூப் சேனலில் நேரலை ஒளிபரப்பு
முழு பேட்டியை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்
வாசகர் கருத்து (7)
ஆரூர் ரங் - ,
05 ஜூலை,2026 - 12:40 Report Abuse
எழுபதுகளின் துவக்கத்திலேயே புதுச்சேரியில் திமுக வும் காங்கிரசும் மாறிமாறி குதிரை பேரத்தில் ஈடுபட்டன. கட்சித்தாவல் அன்றாட நிகழ்வானது. தமிழகத்துக்கு முன்பே 1974 இல் அதிமுக ஆட்சியைப்பிடித்தது. ஆனால் அதனைப் பொறுக்காத காங்கிரசும் திமுகவும் ஆட்சியைக் கவிழ்த்தன. நிலையற்ற அரசியல் தொடர்ந்தது. ஊழல் பெருகியது. ஆக யாருக்கும் வெட்கமில்லை. 0
0
Reply
Ramesh Sargam - Back in Bengaluru, India.,இந்தியா
05 ஜூலை,2026 - 12:30 Report Abuse
இந்த செங்கோட்டையன் இதற்கு முன்பு இருந்த கட்சியிலும் குதிரை பேரம் மிக மிக சிறப்பாக இருந்தது. அது அவருக்கே நன்றாக தெரியும். 0
0
Reply
chinnamanibalan - Thoothukudi,இந்தியா
05 ஜூலை,2026 - 12:15 Report Abuse
மைனாரிட்டி அரசு காலம் தள்ள இயலாது. எனவே குதிரை பேரம் கொடி கட்டிப் பறக்கிறது. 0
0
Reply
V Venkatachalam, Chennai-87 - Chennai,இந்தியா
05 ஜூலை,2026 - 12:01 Report Abuse
அதுல ஒரு எள்ளளவு சந்தேகமும் கிடையாது. எம் ஜி ஆர் ஆட்சியை கவுக்க கட்டுமரம் கருணா ஒவ்வொரு எம் எல் ஏ கிட்டேயும் போனில் ரகசியமா பேசி துவங்கி வச்சதை வரலாறு பேசும். 0
0
Reply
முருகன் - ,
05 ஜூலை,2026 - 11:52 Report Abuse
96 திமுக மைனாரிட்டி என்றால்
இந்த107 ..... ஆட்சியும் மைனாரிட்டி தான்
திமுக தயவில் வெற்றி பெற்ற ஒரு சதவிகிதம் இரு சதவீதம் கட்சிகளை சேர்த்து கொண்டு
இப்படி பேசுவது தவறு 0
0
Reply
அருண் பிரகாஷ் மதுரை - ,
05 ஜூலை,2026 - 11:51 Report Abuse
ஒரே வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால் மாற்றத்தை எதிர்பார்த்த மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான்.உங்களைப்போல் தேர்தலுக்கு முன் கட்சியை மதித்து வந்தவர்களுக்கும் தேர்தல் வெற்றிக்குப் பின் வருபவர்களுக்கும் மிகப்பெரிய வித்தியாசம் உள்ளது. இவர்களை எல்லாம் சேர்க்க வேண்டிய அவசியம் என்ன. தேர்தலுக்கு முன் மதிக்காத கட்சிகளுக்கு கேவலம் முதல்வர் பதவிக்காக மந்திரி பதவி கொடுத்த உங்கள் கட்சித் தலைவரை நம்பி ஓட்டுப் போட்ட மக்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றமே மிச்சம். 0
0
பிரேம்ஜி - ,
05 ஜூலை,2026 - 12:22Report Abuse
உண்மைதான்! ஓட்டுப் போட்டார்கள் மாற்றத்தை தேடி! இப்போது கிடைத்தது மாற்றம் அல்ல! பெரும் ஏமாற்றமே! அயோக்கிய பயல்கள் அத்தனை பேரையும் கட்சியில் சேர்க்க என்ன தேவை இருக்கிறது? 0
0
Reply
மேலும்
-
சூடாமணிபுரத்தில் மேய்ச்சல் நிலமான பூங்கா
-
தென்மாப்பட்டில் மாாட்டு வண்டி பந்தயம்
-
ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
-
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள்; 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு
Advertisement
Advertisement