இரு நாடுகளின் ராணுவத்தை அழித்துவிட்டோம்: டிரம்ப் தம்பட்டம்
வாஷிங்டன்: வெனிசுலா மற்றும் ஈரான் ஆகிய இரு நாடுகளின் ராணுவத்தை அமெரிக்கா முற்றிலுமாக அழித்துவிட்டது என அதிபர் டிரம்ப் தெரிவித்தார்.
அமெரிக்காவில் நடந்து வரும் சுதந்திர கொண்டாட்ட நிகழ்ச்சியில் அதிபர் டிரம்ப் பேசியதாவது: வெனிசுலாவைப் பாருங்கள், ஈரானைப் பாருங்கள். நாங்கள் அவர்களின் ராணுவத்தையே ஒழித்துவிட்டோம். எனது முதல் பதவிக்காலத்தில் ஆயுதப்படைகளை புனரமைக்க தனது நிர்வாகம் மேற்கொண்ட முயற்சிகளே இந்த ராணுவ திறனுக்கு காரணம்.
உலகின் மிகவும் வலிமையான மற்றும் சக்திவாய்ந்த நாடாக நாம் உருவானது வரலாற்றின் தற்செயலான நிகழ்வு அல்ல. அமெரிக்கா விரும்பினால் எஞ்சியிருக்கும் ஈரான் தலைமையை ஒரே அடியில் ஒழிக்கும் திறன் தன்னிடம் இருக்கிறது. அவர்கள் அனைவரும் அங்கே ஒரே இடத்தில் தான் இருக்கிறார்கள்.
ஒரே ஒரு தாக்குதலில் அவர்கள் அனைவரையும் நம்மால் வீழ்த்திவிட முடியும். ஆனால் நாம் அதை செய்ய போவதில்லை. ஏனென்றால் அப்படி செய்தால் பேச்சு நடத்த நமக்கு யாரும் இருக்க மாட்டார்கள். இவ்வாறு அதிபர் டிரம்ப் பேசினார்.
இவன் வை கோபால் சாமிய விட காமெடி பிஸ்சா இருக்கான்
அமெரிக்க அதிபர் பதவிக்கு யார் வந்தாலும் அது இந்த வெள்ளையின கோமாளி டிரம்ப் என்றாலும் சரி அல்லது கறுப்பினத்தை சேர்ந்த 44 வது அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா என்றாலும் சரி அவருக்கு முன் ஆண்ட ஜான் எஃப். கென்னடி, லிண்டன் பி. ஜான்சன், ரிச்சர்ட் நிக்சன், ஜெரால்ட் ஃபோர்டு, ஜிம்மி கார்ட்டர், ரொனால்ட் ரீகன், அப்பன் மகன்களான ஜார்ஜ் W. புஷ், பில் கிளிண்டன், இவர்களின் ஒரே குறிக்கோள் உலக நாடுகளை அடக்கி ஆள வேண்டும் என்ற திமிர்தான் காரணம்
அமெரிக்காவிற்கு 250 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாறு என்ன என்பதை பூதக் கண்ணாடி வைத்து தேடி கண்டுபிடிக்க வேண்டும் ஆனால் ஈரான் அப்படியா? இந்தியாவை போலவே நான்காயிரம் வருடங்களுக்கு முன்பே அவர்களின் பாரசீகம் பழைமை வாய்ந்த நாகரிகம் அதனால் அமெரிக்காவிற்காக ஈரானை அவ்வளவு சுலபத்தில் நாம் விட்டுக் கொடுக்க முடியாது அது முஸ்லீம் நாடாக இருந்தாலும் நம்மை காஷ்மீரில் ஆதரிக்காமல் பாகிஸ்தானுக்கு ஆதரவு கொடுத்தாலும் அதற்காக அமெரிக்காவிற்கு நாம் ஆதரவு அளிக்கக் கூடாது
நம்முடைய பண்டைய புராணமான மஹாபாரதத்தில் துரியோதனனிடம் பஞ்ச பாண்டவரை முன்நிறுத்தி இந்த ஐவரில் யாரை வேண்டுமானாலும் உன்னுடன் போரிட நீ தேர்ந்தெடுத்துக் கொள் என்று சொல்லும் போது அவன் எனக்கு சரிநிகர் சமமானவன் பீமன்தான் என்று அவனை தேர்ந்தெடுத்தான். அதே போல் இராமாயணத்தில் கடைசியில் போரில் தோற்று நிராயுதபாணியாக
நின்ற இராவணனை பார்த்து இன்று போய் நாளை வா என்று இராமன் சொன்னதுதான் தர்ம யுத்தம் என்பது அது
நமது தேசத்திற்கே உரித்தானதாகும்.
அகந்தையை விட்டு சரணடைந்து விடு, அல்லது போரிட நாளை வா என்று ராமர் அவனுக்கு ஒரு வாய்ப்பளித்தார்.
அதே போல் ஜப்பான், போரை நிறுத்திக் கொள்கிறோம் என்று சொன்ன பின்பும் அந்த நாட்டின் ஹிரோஷிமாவின்
மீது முதல் அணுகுண்டை வீசியது அமெரிக்கா அதுவுமில்லாமல் அடுத்த அணுகுண்டை சோதித்து பார்க்க மூன்று நாட்கள் கழித்து ஜப்பான் நாகசாகியில் பொதுமக்களின் மீது இரண்டாவது அணுகுண்டை போட்டது இதே அமெரிக்கா.. எந்த தைரியத்தில் மற்றொரு நாட்டின் வெனிசுலா அதிபரையும் அவரது மனைவியையும் கை விலங்கிட்டு இழுத்து வர முடிகிறது? இந்த தைரியம் அமெரிக்காவிற்கு எப்படி வந்தது? இதை உலக நாடுகள் கண்டிக்காதது ஏன்? இதே நிலை உங்களுக்கு வர எத்தனை நாட்களாகும்? அமெரிக்கா எல்லா நாட்டுடைய மண்ணில் ஈஸியாக கால் வைக்கும் ஆனால் இதுவரை எந்த நாடும் அமெரிக்க மண்ணை தொட்டதில்லை
அந்த திமிர்தான் அமெரிக்காவிற்கு இந்தியாவை இங்கிலாந்து உள்ளிட்ட மற்ற அனைத்து நாடுகளும் அடிமை போல் நடத்தி இருக்கின்றன. ஆனால் இந்தியா தன்னுடைய எல்லையை தாண்டி மற்ற நாடுகளை சிறை பிடிக்கும் வேலையில் ஈடுபட்டதில்லை. அமெரிக்கா ஈரானை தாக்கியது மன்னிக்க முடியாத குற்றம். இதே இஸ்ரேல் முன்பு அமெரிக்காவை தாக்கியிருக்கிறது என்று சொன்னால் யாராவது நம்புவீர்களா? அரபு நாடுகளுக்கும் இஸ்ரேலுக்கும் ஆறு நாட்கள் நடந்த போரில் வருடம் நினைவுக்கு வர மாட்டேங்கிறது யாருக்கும் தெரியாமல் கடலில் வேவு பார்த்த அமெரிக்காவின் உளவுக் கப்பலை இஸ்ரேல் தைரியமாக குண்டு வீசி அழித்தது அந்தக் கப்பலில் உள்ள 35 அமெரிக்கர்கள் அந்தக் கப்பலுடன் ஜல சமாதி ஆனார்கள். இதற்கு Just like that என்பது போல் இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஒரே ஒரு SORRY என்பதுடன் நிறுத்திக் கொண்டது.
கடைசியாக என்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பிழந்து வீழ்ச்சியடைகிறதோ அன்றைக்குதான் அமெரிக்காவின் கொட்டம் அடங்கும்.
ஆணவம் தான் அழிவுக்கு முதல் படி.
இப்படி தம்பட்டம் அடித்து திரிந்துகொண்டிருக்கும் இந்த மனிதரின் ஆணவத்தை "அழிக்க" யாராவது வரவேண்டும். எப்ப பார்த்தாலும் போர், வரிவிதிப்பது, மற்றநாடுகளின் உள் நாட்டு பிரச்சினையில் தலையிடுவது, மிரட்டுவது, அழிப்பது ஒன்றே குறியாக உள்ளார் இந்த மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்.
ஆணவத்தின் உச்சம். இதனால் தான் அமெரிக்காவை இப்போது யாரும் மதிப்பதில்லை. இப்போது உலக அரங்கில் பாரதம் போற்றப் படுகிறது
யாருக்கும் தெரியாமல் கடலில் வேவு பார்த்த அமெரிக்காவின் உளவுக் கப்பலை இஸ்ரேல் தைரியமாக குண்டு வீசி அழித்தது அந்தக் கப்பலில் உள்ள 35 அமெரிக்கர்கள் அந்தக் கப்பலுடன் ஜல சமாதி ஆனார்கள். இதற்கு Just like that என்பது போல் இஸ்ரேல் அமெரிக்காவிடம் ஒரே ஒரு SORRY என்பதுடன் நிறுத்திக் கொண்டது. கடைசியாக என்றைக்கு அமெரிக்க டாலர் மதிப்பிழந்து வீழ்ச்சியடைகிறதோ அன்றைக்குதான் அமெரிக்காவின் கொட்டம் அடங்கும்.
மெய்யாலுமா?மேலும்
-
சூடாமணிபுரத்தில் மேய்ச்சல் நிலமான பூங்கா
-
தென்மாப்பட்டில் மாாட்டு வண்டி பந்தயம்
-
ஆதினமிளகி அய்யனார் கோயில் புரவி எடுப்பு
-
இன்றைய நிகழ்ச்சி
-
மும்பையில் வெளுத்து வாங்கும் கனமழை; மக்கள் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தல்
-
இன்ஸ்டாகிராமில் குழந்தைகளைத் துன்புறுத்தும் விளம்பரங்கள்; 7 நாட்களில் பதில் கோரி மத்திய அரசு உத்தரவு