தேசிய போஸ்டர் போட்டி; மதுரை மாணவிக்கு பரிசு

மதுரை: இந்திய கலை மற்றும் கலாசார பாரம்பரியத்திற்கான தேசிய அறக்கட்டளை (இன்டாக்) சார்பில் 7 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கான தேசிய அளவிலான ஓவியம், போஸ்டர், கட்டுரைப் போட்டி நடத்தப்பட்டது.

ஒரு பூர்வீக மரம், செடி, மலரை ஓவியமாக வரைவதோடு போஸ்டராகவும் தயாரித்து அது குறித்து கட்டுரை எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 12 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் தேர்வான 15 பேரில் மதுரை மகாத்மா குளோபல் கேட்வே பள்ளி மாணவி சஸ்மிதாவும் ஒருவர். இவர் கொடைக்கானலில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் நீலக்குறிஞ்சி மலரை வரைந்து போஸ்டர் தயாரித்து கட்டுரை எழுதினார்.

டில்லியில் நடந்த பரிசளிப்பு விழாவில் டிராபி வழங்கப்பட்டது. மாணவியை பள்ளி முதல்வர் மீனா, ஓவிய ஆசிரியர் ரவிக்குமார் பாராட்டினர்.

Advertisement