குடியிருப்போர் சங்க ஆலோசனை
திருப்பரங்குன்றம்: தனக்கன்குளம் சமாதான நகர் மகிழம்பூ குடியிருப்போர் நலச்சங்க நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
தலைவர் கடற்கரை தலைமை வகித்தார். செயல் தலைவர் சிவநாராயணன், ஒருங்கிணைப்பாளர் இளஞ்செழியன் முன்னிலை வகித்தனர். செயலாளர் சொக்கலிங்கம் வரவேற்றார்.
செயற்குழு உறுப்பினர் நாகேஸ்வரி அறிமுக உரையாற்றினார். திருநகர் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் மதனகலா, நெடுஞ்செழியன், எஸ்.ஐ., மகேஷ்வரன், சமூக பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு குறித்து பேசினர்.
பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்ற உத்தீஸ், தர்ஷினி, ஸ்ரீமதிக்கு பரிசு வழங்கப்பட்டது. துணைத்தலைவர் புகழேந்தி தீர்மானங்கள் வாசித்தார். அடிப்படை வசதிகள் கேட்டு அதிகாரிகளிடம் மனு அளிப்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செயற்குழு உறுப்பினர் நெடுஞ்செழியன் நன்றி கூறினார்.
மேலும்
-
சிறிய வீடு கட்ட பிரீகாஸ்ட் கட்டுமான முறை உகந்ததா?
-
சுவர்களில் ஈரம்...அலர்ஜி ஏற்படுத்தும்! ஆரம்பத்திலேயே தடுப்பது கட்டடத்துக்கும் நலம்
-
நில வழிகாட்டி மதிப்பு குழப்பங்களுக்கு தீர்வு என்ன?
-
நகைகள் ஏற்றுமதி மே மாதம் 26% உயர்வு
-
ஏலக்காய் ரூ.4,149 கோடிக்கு ஏற்றுமதி கடந்த 2 ஆண்டுகளில் 3 மடங்கு உயர்வு
-
இந்தியாவில் சீன போன்கள் விற்பனை 6 ஆண்டுகளில் இல்லாத சரிவு