விழிப்புணர்வு ஊர்வலம்

மதுரை: மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் ஆக.1 முதல் நடக்க உள்ளன. முதற்கட்டமாக வீடுகள் குறித்த கணக்கெடுப்பு பணி நடக்க உள்ளது. அடுத்த ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுக்கப்படும்.

வீடுகள் குறித்த கணக்கெடுப்புக்கு முன்பாக பொதுமக்களே சுயகணக்கெடுப்பாக இணையத்தில் (https://se.census.gov.in/) பதிவு செய்யலாம். இதுகுறித்த விழிப்புணர்வு தமுக்கம் மைதானத்தில் கலெக்டர் நிஷாந்த் கிருஷ்ணா, மாநகராட்சி கமிஷனர் கவுரவ்குமார் துவக்கி வைத்தனர். முன்னதாக நடந்த கையெழுத்து இயக்கத்தில் பொதுமக்கள் பலர் கையெழுத்திட்டனர்.

இந்நிகழ்ச்சியில் உதவி பயிற்சி கலெக்டர் சித்தார்த் போகர்னா, மாநகராட்சி துணை கமிஷனர்கள் ஜெயினுலாப்தீன், ராஜாராம், முதன்மை கல்வி அலுவலர் தயாளன், கல்வி அலுவலர் மோகன் பங்கேற்றனர்.

Advertisement