எஸ்.சி.,-எஸ்.டி., மாணவர்கள் உதவித்தொகை பெற அழைப்பு
கரூர்:'எஸ்.சி.,-எஸ்.டி., மாணவ, மாணவியர் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்தார்.
இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில், எஸ்.சி.,-எஸ்.டி., கிறிஸ்தவ மதம் மாறிய எஸ்.சி.,- எஸ்.டி.,
மாணவ,
மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த
கல்வியாண்டில், https://umisdashboard.tnega.org என்ற இணையதளத்தில்
கல்லுாரி மூலம் கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்.
https://emis.tnschools.gov.in/auth/login?returnUrl=%2Fdashboard என்ற
இணையதளத்தின் வாயிலாக பள்ளி மாணவ, மாணவியர் விபரங்கள் பெறப்பட்டு
தகுதியுள்ள மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க நடவடிக்கை
மேற்கொள்ளப்படும். பெற்றோர் ஆண்டு வருமானம், 2.50 லட்சம் ரூபாயாக
இருக்க வேண்டும். இது தொடர்பாக கரூர் கலெக்டர் அலுவலகம் அறை எண், 114ல்
உள்ள மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம்.
மேலும், 1800-599-7638 என்ற கட்டணமில்லா சேவை எண்ணில் தொடர்பு
கொள்ளலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும்
-
ஈரான் மீது 11வது நாளாக அமெரிக்கா தாக்குதல்; பேச்சுவார்த்தை நடத்த அதிபர் டிரம்ப் மறுப்பு
-
எரிசக்தி பாதுகாப்பை இனி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியாது; ஜெய்சங்கர்
-
அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகள்; 2 ஆண்டுக்கு பிறகு புதிய வரி அறிவித்தார் டிரம்ப்
-
காட்சில்லா Vs காங் படத்தின் 18 வயது இளம் நடிகை விபத்தில் மரணம்; அதிர்ச்சியில் ஹாலிவுட்
-
பிரான்சில் 15 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்த தடை
-
எம்.ஜி., 'அடாப்ட்' ஒரே உற்பத்தி தளத்தில் நான்கு கார்கள்