கரூரில் நாளை வேளாண் கண்காட்சி

கரூர்:'கரூரில், நாளை வேளாண் கண்காட்சி நடக்கிறது' என, கலெக்டர் முத்துக்குமரன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து, அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
கரூர், தான்தோன்றிமலை நாயுடு மஹாலில் வேளாண்துறை சார்பில் வேளாண் கண்காட்சி, நாளை காலை, 10:30 மணிக்கு நடக்கிறது. இதில், வேளாண், தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிகம், விதை சான்றளிப்பு, தேசிய வாழை ஆராய்ச்சி நிலையம் உள்பட பல வேளாண் சார்ந்த துறைகள் பங்கேற்று கண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட உள்ளன.
இக்கண்காட்சியில், வேளாண் பல்கலை வேளாண் விஞ்ஞானிகள் மற்றும் வேளாண் விரிவாக்க அலுவலர்கள் கலந்துகொண்டு விவசாயி
களுக்கு தேவையான புதிய தொழில்நுட்பம் மற்றும் திட்டங்கள் குறித்து விரிவாக கூறியுள்ளனர். வேளாண் விஞ்ஞானிகளுடன் விவசாயிகள் கலந்துரையாடல் நிகழ்ச்சிகள் நடக்கிறது. புதிய தொழில்நுட்பங்கள், வயல்வெளிகளில் ஏற்படும் பிரச்னைகளுக்கு நேரடி தீர்வும் வழங்கப்படவுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement