இறந்தவர் குறித்து போலீஸ் விசாரணை
புதுச்சேரி: அரசூர் சாராயக்கடை அருகே இறந்து கிடந்தவர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
வில்லியனுார் அடுத்த அரசூர் சாராயக்கடை அருகில் 48 வயது மதிக்க தக்க ஆண்நபர் நேற்று முன்தினம் மதியம் 2 மணியளவில் இறந்து கிடந்தார். தகவலறிந்த வில்லியனுார் போலீசார் உடலை மீட்டு அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப் பதிந்து இறந்தவர் யார், எந்த ஊர், இறப்பிற்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement