கஞ்சா விற்றவர் கைது

பாப்பிரெட்டிப்பட்டி; பாப்பிரெட்டிப்பட்டி அடுத்த வாணியாறு அணை பகுதியில், இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் உள்ளது. இப்பகுதியில் நேற்று காலை, பாப்பி-ரெட்டிப்பட்டி எஸ்.எஸ்.ஐ., நேரு உள்ளிட்ட போலீசார் போதை பொருள் தடுப்பு பணியில் ஈடு-பட்டனர்.


அப்போது போலீசாரை கண்டதும் முகாமை சேர்ந்த ராஜா, 55, பதுங்கினார். போலீசார் அவரை சோதனை செய்தனர். அவர் பாலித்தீன் கவரில், 50 கிராம் கஞ்சா வைத்திருந்ததை கண்டுபிடித்து அவரை கைது செய்தனர்.

Advertisement