மூதாட்டியிடம் செயின் பறிப்பு

சிவகங்கை, ஜூலை 29-–

காளையார்கோவில் அருகேயுள்ள காஞ்சிரம் பகுதியை சேர்ந்தவர் தாமரைச்செல்வன் 70, வள்ளி 60 தம்பதி. இவர்கள் இருவரும் நேற்று முன்தினம் வீட்டில் இருந்தபோது அவர்களது ஆட்டை அருகில் இருந்த மாடு முட்ட வந்துள்ளது. அவற்றை விரட்ட வள்ளி மதியம் 12:00 மணிக்கு வீட்டிற்கு வெளியே சென்றார். அப்போது அங்கு வந்த 35 வயதுள்ளவர் வள்ளி அணிந்திருந்த 7 பவுன் தங்க தாலி செயினை பறித்துக்கொண்டு தப்பினார். வள்ளி காளையார்கோவில் போலீசில் புகார் அளித்தார்.

Advertisement