டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
தி.நகர்: ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் பணி புரிந்து ஓய்வு பெற்ற டாக்டர் எம்.கே.சீனிவாசனின், 100வது பிறந்த நாள் விழா, தி.நகரில் நேற்று நடந்தது.
ஆந்திர மாநிலம் குண்டூரைச் சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மற்றும் அலமேலு தம்பதிக்கு, 1927ம் ஆண்டு 5வது மகனாக பிறந்தவர் எம்.கே.சீனிவாசன். இவர், சென்னை ஸ்டான்லி மருத்துவ கல்லுாரியில், 1945ம் ஆண்டு மருத்துவம் படித்தார்.
ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் டாக்டராக பணியாற்றினார். கடந்த 1950ம் ஆண்டு இந்திரா என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவரது மகள்கள் லக்ஷ்மி மற்றும் மாலதி.
டாக்டர் எம்.கே.சீனிவாசனின் 100வது பிறந்தநாள் விழா, நேற்று தி.நகரில் உள்ள சக்கர விநாயகர் கோவிலில் நடந்தது.
அவர் பேசுகையில், ''எனக்காக இங்கு வந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். சங்கீதத்தை போல் மனதிற்கு சாந்தி அளிப்பது, வேறு ஏதும் இல்லை. மனதில் எந்த கவலை இருந்தாலும், பாடல்கள் பாடினால் மனசு சாந்த மாகிவிடும்,'' என்றார்.
நிகழ்வில் ஆடிட்டர் ருத்ர குமார் பேசுகையில், ''டாக்டர் எம்.கே.சீனிவாசனிடம் ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடு கிடையாது. நடிகர் சிவாஜி கணேசனின் குடும்பத்தினருக்கு சிகிச்சை அளிப்பது போலவே, ஏழை தொழிலாளியின் குடும்பத்தையும் பார்ப்பார்.
''விடியற்காலை 3:00 மணி வரைக்கும் நோயாளி களுக்கு சிகிச்சை அளிப்பார். அவரது நற்பண்புகள் மற்றும் சேவைகளை பார்த்து தான், என்னாலும் செய்ய முடியும் என நம்பிக்கை வந்தது,'' என்றார்.
I have seen the poster of this function opp to sakkara vinayaga temple while going and coming back from office in T.Nagar.But didnt know he is such a noble person of this area.Completely seen the video of this news......இது போன்ற புண்ணிய ஆத்மாக்களால் தான் இந்த இந்திய பூமி புனிதம் அடைகிறது...வாழ்த்த வயதில்லை வணங்குகிறோம்
இதுபோன்ற உண்மையான சமுதாயப் பணி செய்தவர்களைப் பற்றிய விரிவான தகவல்களை/உரையாடல் /பேட்டி கொடுத்தால் இளைய சமுதாயம் உந்துதல் பெறும்.மேலும்
-
தொழில் நிறுவனங்களுடன் முதலீட்டு ஒப்பந்தம்; முதல்வர் விஜய் முன்னிலையில் கையெழுத்து
-
ஆக.,12ம் தேதி சூரிய கிரகணம்; நேரலை செய்வதாக நாசா அறிவிப்பு
-
லோக்சபா தொடங்கிய சிறிது நேரத்திலேயே முடங்கியது; எதிர்க்கட்சிகள் கடும் அமளி
-
ஆன்லைன் மூலம் அனைத்து டெண்டர்களும் வெளியிடப்படும்; அமைச்சர் ரமேஷ் அறிவிப்பு
-
எல் நினோ தாக்கம் குறித்து ஆராய 7 பேர் கொண்ட குழு அமைத்தது தமிழக அரசு
-
டாஸ்மாக் ஊழல் வழக்கு; செந்தில் பாலாஜி முன் ஜாமின் மனு தள்ளுபடி