மீன் விற்பனை செய்ததில் ரூ.16.53 லட்சம் முறைகேடு; 5 அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு
கோவை: தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகம் கோவை மார்க்கெட்டிங் பிரிவில், 2018-19 மற்றும் 2019 ஏப்., - ஜூன் காலத்தில் மீன் விற்பனை செய்ததில், ரூ.16.53 லட்சம் முறைகேடு செய்து, தமிழக அரசுக்கு நிதியிழப்பு செய்ததாக, ஐந்து அதிகாரிகள் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.
தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் கோவை மார்க்கெட்டிங் பிரிவின் கீழ் காந்திபுரம், குறிச்சி, பாப்பம்பட்டி, சிங்காநல்லுார், சூலுார், உக்கடம், வெள்ளலுார் உட்பட, 12 சில்லறை மீன் விற்பனை நிலையங்கள், ஒரு மொபைல் விற்பனை யூனிட் செயல்பட்டு வந்தன. அதன்பின், ஆழியாறு விற்பனை நிலையமும் இதன் கட்டுப்பாட்டில் சேர்ந்தது.
மீன் கொள்முதல், விற்பனையில் முறைகேடு செய்து, அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுத்தியிருப்பதாக, லஞ்ச ஒழிப்பு துறைக்கு புகார் வந்தது. விசாரணை நடத்தியதில், 2018-19 நிதியாண்டு, 2019ல் ஏப்., முதல் ஜூன் வரையிலான காலத்தில் மீன் கொள்முதல், இருப்பு, விற்பனை மற்றும் வங்கி வரவு பதிவுகளில் போலி கணக்குகள் பராமரிக்கப்பட்டது கண்டறியப்பட்டது.
உண்மையான விற்பனை தொகை, தமிழ்நாடு மீன்வள மேம்பாட்டு கழகத்தின் வங்கி கணக்கில் செலுத்தாததும் தெரியவந்தது. ரூ.16.53 லட்சம் அரசுக்கு நிதியிழப்பு ஏற்பட்டுள்ளது.
அப்போது மார்க்கெட்டிங் மேலாளராக இருந்த கொளஞ்சிநாதன், தற்போது மீன்வளத்துறையில் மேட்டூர் அணை உதவி இயக்குனராக உள்ளார். முன்னாள் மார்க்கெட்டிங் மேலாளர் சத்தியமூர்த்தி, துணை மேலாளர் ராஜன், இளநிலை கணக்காளர் சகாயராஜ், வெளிமுகமை மூலம் நியமிக்கப்பட்ட உதவி மேலாளர் சுரேஷ்குமார் ஆகிய 5 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர்.


இப்ப மீன் விற்பனை வேண்டுமா அல்லது வேண்டாமா என்பது பற்றி பேசவில்லை.
ஊழல் செய்ததை பற்றிய லஞ்ச ஒழிப்பு காவல்துறையின் நடவடிக்கை.
மீன் விற்பதெல்லாம் அரசு வேலையா? இந்த மாதிரி தேவை இல்லாத வேலைய நிறுத்தி காசை மிச்ச படுத்தலாம்...
அந்த மீன் வளத்துறை அதிகாரிகள் வீட்டில் தினந்தோறும் மீன் குழம்பு சுறா புட்டு வஜ்ஜிரம் வறுவல் என்று சுவையான சாப்பாடு தான்! பக்கத்து வீட்டுக்காரர் யாராவது மணம் பொறுக்க முடியாமல் பொறாமையால் வத்தி வைத்து இருக்க வேண்டும்! இதை பெரிது படுத்த கூடாது!மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்