திருக்கோவிலுாரில் ஆரம்பப் பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

திருக்கோவிலுார்: தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தமிழக ஆரம்ப பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில், ஆசிரியர்களுக்கான டெட் தேர்வை ரத்து செய்ய வேண்டும், 2010 ம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கு டெட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும், தற்போது நடைபெற்ற டெட் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருக்கோவிலுார் வட்டார கல்வி அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

வட்டாரத் தலைவர் ரவி தலைமை தாங்கினார். வட்டார செயலாளர் வெங்கடேஷ் வரவேற்றார். வட்டார மகளிர் அணி செயலாளர் கவிதா முன்னிலை வகித்தார். ஒருங்கிணைந்த கட்டிட பிரிவு மாவட்ட செயலாளர் இளஞ்செழியன், ஆசிரியர் கூட்டுறவு சங்க தலைவர்‌ செல்லபாண்டியன் பங்கேற்று கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

மாநில கூடுதல் தலைவர் திருமலை, மாவட்டத் துணைச் செயலாளர் ராமலிங்கம், மாநில துணைப் பொதுச் செயலாளர் சதீஷ், மாநில செயற்குழு உறுப்பினர் கருணா மூர்த்தி உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலரும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

வட்டார பொருளாளர் முரளி நன்றி கூறினார்.

Advertisement