திருநங்கைகளுக்கு குறைகேட்பு கூட்டம்
உடுமலை: திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஆக. 7ம் தேதி நடக்கிறது.
திருப்பூர் மாவட்ட கலெக்டர் மனிஷ் நாரணவரே வெளியிட்டுள்ள அறிக்கை:
திருநங்கைகளின் குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், அனைத்து மாவட்டங்களிலும், மாதந்தோறும் முதல் வெள்ளிக்கிழமைகளில், திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம் நடத்தப்பட உள்ளது.
அவ்வகையில், திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் திருநங்கைகளுக்கான குறைகேட்பு கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில், வரும் ஆக. 7 ம் தேதி, காலை, 11:00 மணிக்கு நடைபெறும். திருநங்கையர் பங்கேற்று தங்கள் குறைகளை தெரிவித்து தீர்வு பெறலாம். இவ்வாறு, கலெக்டர் தெரிவித்துள்ளார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து பிரேசில் வீரர் நெய்மர் ஓய்வு
-
வி.ஏ.ஓ., கொலை வழக்கு: இருவருக்கு ஆயுள்; உறுதி செய்தது உயர்நீதிமன்றம்
-
நிறைவேற்ற முடியும் என்ற ஆசிரியர்களின் கோரிக்கைக்கு முதல்வர் 'கிரீன் சிக்னல்'; பட்டியலிடவும் கல்வித்துறைக்கு உத்தரவு
-
பள்ளிக்கு அடிப்படை வசதிகள் கேட்டு பெற்றோருடன் மாணவர்கள் போராட்டம்
-
டாக்டர் எம்.கே.சீனிவாசன் 100வது பிறந்த நாள் விழா
-
அர்ஜென்டினாவில் தீயணைப்பு ஹெலிகாப்டர் விபத்தில் 7 பேர் பலி; காட்டுத்தீயை அணைக்கும் போது சோகம்
Advertisement
Advertisement