வாகனம் மோதி மாணவர் பலி

தர்மபுரி: கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை சாலை, ராஜவீதி தெருவை சேர்ந்த குமார் என்பவரின் மகன் ஹரீஷ், 15, பத்தாம் வகுப்பு மாணவர். இவர் அதே பகுதியை சேர்ந்த தனபிரபு, 18 மற்றும் பெரியாம்பட்டியை சேர்ந்த சந்துரு ஆகியோருடன் பெரியாம்-பட்டி மாரியம்மன் கோவிலுக்கு பல்சர் பைக்கில் சென்றுள்ளனர்.

பைக்கை சந்துரு ஓட்டியுள்ளார். மாலை, 4:00 மணியளவில் பொன்னேரி அருகே தர்மபுரி - கிருஷ்ண கிரி தேசிய நெடுஞ்சா-லையில் சென்றபோது, அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பைக்கில் பின்னால் அமர்ந்து சென்ற ஹரீஷ் பலியானார். மற்ற இருவரும் படுகாயமடைந்தனர். காரிமங்கலம் போலீசார் விசாரிக்-கின்றனர்.

Advertisement