பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்ய ஆர்ப்பாட்டம்

ஊத்தங்கரை: விவசாயிகளின் பயிர்க்கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்-யக்கோரி, ஊத்தங்கரை அடுத்த, கல்லாவி தொடக்க வேளாண் கூட்டுறவு சங்கத்தின் முன், கண்டன ஆர்ப்பாட்டம் நேற்று நடந்-தது. தமிழக விவசாயிகள் சங்க, மாநில தலைவர் ராமகவுண்டர் தலைமை வகித்தார். இதில், 500-க் கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர்.


ஆர்ப்பாட்டத்தில், கடந்த, 2026 சட்டசபை தேர்தல் பிரசாரத்தின்-போது, தமிழக முதல்வர் ஜோசப் விஜய், 'ஆட்சிக்கு வந்தால், விவசாயிகளின் கூட்டுறவு பயிர்க்கடன்கள் அனைத்தும் முழுமை-யாக தள்ளுபடி செய்யப்படும்' என, வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால், ஆட்சிக்கு வந்த பின், பல நிபந்தனை விதித்து, பயிர்க்க-டன்களை அரசு முழுமையாக தள்ளுபடி செய்யவில்லை. இதனால் விவசாயிகள் பெரும் ஏமாற்றமடைந்துள்ளனர். தற்-போது நிலுவையிலுள்ள கடன் தொகையை உடனடியாக செலுத்த, கூட்டுறவு சங்கங்களின் மூலம், அதிகாரிகள் நெருக்கடி கொடுப்பதால், கடும் மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளனர், என கண்டன கோஷமிட்டனர்.

Advertisement