ஹார்முஸ் ஜலசந்தி மீண்டும் திறக்க வாய்ப்பு; கச்சா எண்ணெய் விலை சரிவு
நமது நிருபர்
ஈரானுடன் ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது தொடர்பான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என மூத்த அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்த நிலையில், கச்சா எண்ணெய் விலை மூன்று வாரங்களில் இல்லாத அளவுக்குக் குறைந்துள்ளது.
சர்வதேச போர் பதற்றம் மற்றும் கச்சா எண்ணெய் வினியோகத்தில் தடை ஏற்படுமோ என்ற அச்சம் தணியாததால் கச்சா எண்ணெய் விலை தொடர்ந்து உயர்ந்து வந்தது. குறிப்பாக, அமெரிக்கா - ஈரான் போர் முழு வீச்சில் மீண்டும் துவங்கியதை தொடர்ந்து, உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் மற்றும் சர்வதேச வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவுக்கும், ஈரானுக்கும் இடையிலான மோதலைத் தணிப்பதற்காக சமீப மாதங்களில் நடந்த பேச்சுவார்த்தைகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் மார்கோ ரூபியோ மற்றும் நிதித்துறை அமைச்சர் ஸ்காட் பெசென்ட் ஆகிய இருவரும், ஈரானுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தில் அணுஆயுத ஒழிப்பு மற்றும் ஹார்முஸ் ஜலசந்தி ஆகிய இரு முக்கிய விஷயங்கள் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னேற்றம் அடைந்துள்ளதாக அறிவித்தனர்.
ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பதற்கான ஒப்பந்தம் சில தினங்களில் மேற்கொள்ளப்படலாம் என்றும் அவர்கள் தெரிவிததனர். இதன் எதிரொலியாக, உலகளாவிய எண்ணெய் விலை அளவுகோலான ஒரு பீப்பாய் பிரென்ட் கச்சா எண்ணெயின் விலை கிட்டத்தட்ட 5% சரிந்து, 80 டாலருக்கும் கீழ் குறைந்தது. கச்சா எண்ணெய் விலை டபிள்யூ.டி.ஐ (WTI) பேரலுக்கு 5%க்கும் மேல் சரிந்து, 76 டாலராகக் குறைந்தது. கடந்த 3 வாரங்களில் இல்லாத வகையில் குறைந்துள்ளது.
ஏலேய் பாமர பக்கோடாப் ... உன்னைய விட வேறு எவன் Anti Indian ஆக இருக்க முடியும். இவரு பண்ற காமெடிக்கு நாம சிரிக்கணுமாம் டேய் பக்கோடா முட்டுச் சந்துல மாட்டாம ஒழுங்கா மரியாதையா தப்பிச்சு ஓடிப் போயிரு...
ஏலேய் துப்பு கெட்ட சொம்பு... அவனுவ கொள்ளையடிக்கறது உன் பாக்கெட்டில் இருந்து கூட... வெளங்காத வெண்ணை... ஒங்களையெல்லாம் பகோடா வித்து பொழக்க சொன்ன சேட்டு சரியாத்தான் சொல்லியிருக்கான்...
பாமரா அவர் போடும் கருத்தை புரிந்து படி
திருவாளர் அழகு மாயனுக்கு என்ன வெளங்கிச்சின்னு தெரிஞ்சிக்கலாமா... அது இன்னாங்கயா இந்த பகோடா பீஸ்களுக்கு மரியாதையா எழுதவே தெரியாதா... உங்க வீட்டுல இப்படி பேசி பாரு... சுப்புடு சொன்ன மாதிரி முட்டு சந்துல வச்சி நொங்கெடுத்துவாங்க... உங்களுக்கும் மூளை இருக்குன்னு நம்ப முடியாத அளவுக்கு பிஹேவ் பண்றீங்க
ஒடனே பெட்ரோல் வெலைய ஏன் குறைக்கலன்னு யாராவது ஆண்டி இன்டியன்ஸ் வந்தா கண்ணா பின்னான்னு கூலிப்படையை விட்டு திட்ட வைக்கப்படும்... சாக்கிரத...
நல்ல நாடகம் ... நடத்துங்க.....
கச்சா எண்ணை விலை உயர்ந்தால் மட்டும் உடனே விலை ஏற்றும் மத்திய அரசு விலை குறையும் பொது குறைப்பது கிடாயாது ,,மேலும் ரஷ்யா வில் இருந்து 40 % குறைந்த விலையில் பெற்ற கச்சா எண்ணெய் ஒரு குறிப்பிட்ட எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கு மட்டும் சென்று அங்கிருந்து ஐரோப்பா விற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு உள்ளது .. ஏன் இந்த மாதிரி ..நம் மக்களுக்கு கிடைக்க வேண்டிய சலுகைகள் பறிபோகிறது
ரஷ்ய எண்ணெயை சுத்திகரிக்கும் திறன் இரண்டே நிறுவனங்களிடம்தான் உள்ளது.அதிலும் NAYARA ஒரு ரஷ்ய நிறுவனம்.
நம்ம ரெங்கிடு இன்னொரு கம்பெனி பேரு சொல்ல மாட்டாப்ல...வைவாப்ல ஸ்பான்ஸரு...
ஆமா ஒரு பாமரப் பயபுள்ளைக்கு இம்பூட்டு அறிவா என உன்னை புகழ்வார்