வடமாடு மஞ்சுவிரட்டு 5 பேர் காயம்

திருப்புத்தூர்,ஆக. 10– -

திருப்புத்தூர் ஒன்றியம் வேலங்குடியில் பிடாரி அம்மன் கோயில் ஆடிப் பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நடந்த வட மஞ்சுவிரட்டில் காளைகள் முட்டியதில் 5 பேர் காயமடைந்தனர்.

இதில் புதுக்கோட்டை, திருச்சி, சிவகங்கை, மதுரை மாவட்டங்களை சேர்ந்த 17 காளைகள் பங்கேற்றன. காளைகளை 20 நிமிடத்திற்குள் பிடிப்பதற்கு ஒரு காளைக்கு 9 மாடுபிடி வீரர்கள் வீதம் அனுமதித்தனர். காளைகள் முட்டியதில் 5 பேர் காயமுற்றனர்.

Advertisement