நடுவீரப்பட்டில் திருவிளக்கு பூஜை  

நடுவீரப்பட்டு,ஆக.14–

நடுவீரப்பட்டு அங்காளம்மன் கோவிலில் நேற்று முன்தினம் ஆடி  மாத அமாவாசையை முன்னிட்டு திருவிளக்கு பூஜை  நடந்தது.

பூஜையை முன்னிட்டு அன்று மதியம் அம்மன்  உற்சவர் மற்றும் மூலவருக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் தீபாராதனை நடந்தது. இரவு 7:30 மணிக்கு உலக நன்மை வேண்டி திருவிளக்கு பூஜை நடந்தது.ஏராளமான பெண்கள் பூஜை செய்தனர்.  

Advertisement