மின்நுகர்வோர் குறைதீர் முகாம் 

விருத்தாசலம்: விருத்தாசலம் கோட்ட மின்துறை  செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின்நுகர்வோர் குறைதீர் முகாம் நடந்தது.

முகாமிற்கு, மாவட்ட மேற்பார்வை பொறியாளர் சரவண துரைமோகன் தலைமை தாங்கினார். செயற்பொறியாளர் சுகன்யா முன்னிலை வகித்தார்.

இதில், உதவி செயற்பொறியாளர்கள், உதவி மின் பொறியாளர்கள், மின்துறை ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

முகாமில், மின் இணைப்பு பெயர் மாற்றம், மின்கட்டண திருத்தம், புதிய மின் இணைப்பு கோருவது, சேதமடைந்த மின்கம்பங்கள் உள்ளிட்ட மின் வாரிய புகார்கள் நுகர்வோர்களிடம் பெறப்பட்டு, தீர்வு காணப்பட்டது.

Advertisement