100 இந்தியர்கள் இருக்கும் இடம் தெரிந்தது
காத்மாண்டு: நேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள 100 இந்தியர்கள் , 25 சீனர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
நேபாளத்தில் நேற்று பெய்த கனமழை மற்றும் திபெத் எல்லையையொட்டிய பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஒட்டுமொத்த நாடும் பேரழிவுக்கு ஆளாகியுள்ளது. இந்தப் பேரழிவில் நேபாளத்தினர் மட்டுமின்றி, இந்தியா உள்ளிட்ட வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களும் சிக்கியுள்ளனர். ஆனால், அவர்களின் எண்ணிக்கை சரியாக வெளியிடவில்லை. தமிழர்கள் மற்றும் இந்தியர்களை மீட்க மத்திய அரசும், தமிழக அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நேபாள வெளியுறவுத்துறை அமைச்சர் ஷிஷிர் கனால் கூறியதாவது; வெள்ளப்பெருக்கு மற்றும் நிலச்சரிவு காரணமாக ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருகின்றன. வெள்ளத்தில் சிக்கி இதுவரை 160 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்தில் சிக்கி 300 இந்தியர்கள் உள்பட சுமார் 800 பேரைக் காணவில்லை. மீட்புப் பணிகள் தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகின்றனர், இவ்வாறு அவர் கூறினார்.
இதனிடையேநேபாள பெருவெள்ளத்தில் சிக்கி உள்ள 100 இந்தியர்கள் , 25 சீனர்களின் இருப்பிடத்தை மீட்புக்குழுவினர் கண்டறிந்து உள்ளதாக ராய்ட்டர்ஸ் நிறுவனம் செய்தி வெளியிட்டு உள்ளது.
During monsoon times people should avoid touring to Hilly Regions . Govt should not permit times.
இந்தத் துயர சம்பவத்திற்கு மிகவும் வருத்தம் அளிக்கிறது. காணாமல் போய் உள்ளவர்கள் பத்திரமாக மீட்கப்பட வேண்டும்.
Sad that so many are dead untracesble..But there is one fact this is monsoon time there will be landslide heavy rains cloud bursts lskes breaching in western north india.Tour operators should guide people properly
நேபாள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து இதுவரை 165 உடல்கள் மீட்கப்பட்டுள்ளன, அடையாளம் காணும் பணி நடைபெற்று வருகிறது.
தமிழ் சரியாக தெளிவாக. தடையும், குழப்பமும் இன்றி பேசுகிற நபர்களை மட்டுமே வீடியோ செய்தியில் பேச வைக்கவும். அதுவும் நேபாள வெள்ளம் போன்ற சோக நிகழ்வில் பேசுகிறவர் , நாமெல்லாம் தமிழர்களா என நினைக்கும் அளவுக்கு தாய்த் தமிழ் மொழியை விசனமாக்குவது வேதனை தருகிறது. தயவு செய்து தமிழ் தடையின்றி
பேசுவதை உறுதி செய்யவும்.மேலும்
-
ஒலிம்பிக்கில் முன்னேற்றம் தேவை * பிரதமர் மோடி வலியுறுத்தல்
-
கொழும்பில் கோட்டைவிட்டது இந்தியா * 'டிரா' செய்து ஏமாற்றம்
-
இந்தியா-உருகுவே மோதல் * நட்பு கால்பந்து போட்டியில்
-
கார், பைக் முகப்பு விளக்கின் பிரகாசத்தை குறைக்க நடவடிக்கை
-
தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்; தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
-
ரயில் வழித்தடத்தின் கீழ் சுரங்கப்பாதை 8 மணி நேரத்தில் உருவாக்கி சாதனை