தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில் தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள்; தலைமை தேர்தல் கமிஷனர் தகவல்
சென்னை; ''தமிழகத்தில் அதிக எண்ணிக்கையில், தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் செயல்படுகின்றன,'' என, இந்திய தலைமை தேர்தல் கமிஷனர் ஞானேஷ்குமார் தெரிவித்தார்.
தமிழக தேர்தல் கமிஷன் சார்பில், 'ஜனநாயகத்தை காப்போம்; ஜனநாயகத்தை வழிநடத்துவோம்' என்ற கருப்பொருளில் சென்னையில் மண்டல மாநாடு நடந்தது. முதலாவதாக, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்களுடன் கலந்துரையாடினார். தொடர்ந்து, தேர்தல் நடைமுறைகள் தொடர்பாக, பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருடன் கலந்துரையாடினார். அப்போது, மாணவர்கள், ஆசிரியர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு, அவர் பதில் அளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது: மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், ஓட்டுப்பதிவுக்காக மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளன. வேறு எந்த தொடர்பும் இல்லாத வகையில், இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அனைவரும் எந்தவித அச்சமும் இல்லாமல் ஓட்டளிக்க வேண்டும். செயற்கை நுண்ணறிவு எனும், ஏ.ஐ., தொழில் நுட்பத்தை, ஓட்டுப்பதிவில் செயல்படுத்த முடியாது.
'பயோமெட்ரிக்' முறையை செயல்படுத்துவதிலும், நடைமுறை சிக்கல்கள் உள்ளன. எதிர்காலத்தில் வேண்டுமானால், இந்த நடைமுறைகளை பயன்படுத்தலாம். ஒரு வேட்பாளரின் சொத்து கணக்கு வேறுபாடுகள் குறித்து, தேர்தல் கமிஷன் நடவடிக்கை மேற்கொள்ள முடியாது. அவை, சட்ட ரீதியாக மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், ''இந்தியாவிலேயே, அதிக எண்ணிக்கையிலான தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. தேர்தல் விழிப்புணர்வு மன்றங்கள் மிகவும் இன்றியமையாதவை,'' என்றார்.
அரசாங்க அலுவலகத்தில் ஸ்வீப்பராக வேலைக்கு சேர விண்ணப்பித்தவர்களிடம், "நீ எட்டு படித்திருக்கிறாயா? நீ பத்து படித்திருக்கிறாயா?" என்று கடுமையான கேள்விகளைக் கேட்டு அவர்களில் பலரை நிராகரிக்கிறார்கள்.
ஆனால், தேர்தலில் போட்டியிடும் ஏராளமான வேட்பாளர்கள் கல்வியறிவு பெறாதவர்களாகவும், ஊழல் பின்னணி கொண்டவர்களாகவும், அன்னிய மாநிலத்தைச் சேர்ந்த அயோக்கியர்களால் இறைவன் கொடுத்த நல்லறிவைக் கெடுத்துக் கொண்ட டுபாக்கூர்களாகவும், கிரிமினல் குற்ற பின்னணி கொண்டவர்களாகவும் இருக்கிறார்கள்.
பல லட்சம் கோடி ரூபாய்களுக்கு அதிபதியாக இருந்து கொண்டு, வெறும் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே தனக்கு சொத்து இருப்பதாகவும் பச்சைப் பொய்யை தேர்தலில் போட்டியிடுவதற்கான விண்ணப்பத்தில் எழுதுகிறார்கள்.
இதுபோன்ற வெறும் பத்தாயிரம் ரூபாய் சொத்து மட்டுமே வைத்துக்கொண்டுள்ள கள்ளத்தனமாக ஆட்களை வேட்பாளர்களாக, தேர்தல் ஆணையம் அனுமதித்தால், அது சினிமா தியேட்டரில் ஒழுங்கான முறையில் டிக்கெட் வாங்கியவர்களோடு, டிக்கெட் எடுக்காதவனை தியேட்டருக்குள் திரைப்படம் பார்க்க அனுமதித்தது போல் ஆகிவிடும் அல்லவா?
தவறுகள் நடப்பதை முன்னதாகவே அவதானித்து, அந்த தவறுகள் நடைபெறா வண்ணம் முழுவதுமாக தடுப்பது தேர்தல் கமிஷன், தேர்தல் கமிஷனர் வேலை.
தேர்தலில் போட்டியிடுவதற்காக கொடுத்த விண்ணப்ப படிவத்தில் காணும் வருமானம் மற்றும் சொத்து ஆகியவற்றை பான் எண்களின் மூலம் சரிபார்க்க வேண்டியது தேர்தல் ஆணையத்தின் பொறுப்பு. THIS IS CALLED PROFESSIONAL EXCELLENCE.
உயர்திரு ஞானேஷ் குமார் அவர்களை "ஜூனியர் டி. என். சேஷன்" [உ.ம். பல மாநிலங்களில் நடந்த எஸ்.ஐ.ஆர்] என்று பலரும் அழைப்பதால், அவரிடமிருந்து ஏராளமான நல்லவைகளை எதிர்பார்க்கிறோம்.
அதில் முக்கியமான ஒரே ஒரு எதிர்பார்ப்பு:
"எந்த சூழ்நிலையிலும், ஒரு அயோக்கியன் கூட பாராளுமன்றத்திற்கோ, சட்டமன்றத்திற்கோ, மாநகராட்சி முதல் பஞ்சாயத்து வார்டுக்கோ சென்று விடக்கூடாது" என்பது தான்.
அயோக்கியர்கள் பாராளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் இருந்தால், அங்கு கூச்சலும், கூப்பாடும், ஒழுக்கக்கேடும் நிறைந்திருக்கும். பாராளுமன்றம் நேரம் குறிப்பிடாத வகையில், ஒத்திவைக்கப்படும். மசோதாக்கள் ஒன்று கூட பாஸ் ஆகாது. பாரத மக்களின் வரிப்பணம் பாழாகும். பாராளுமன்ற உறுப்பினர்கள் கேண்டினிற்குச் சென்று வயிற்றை ரொப்பிக்கொண்டு வருவார்கள்.
சுருக்கமாகச் சொன்னால், "பாராளுமன்றத்திலும், சட்டசபையிலும், அயோக்கியர்கள் மட்டும் தான் புகழ்மிக்க வாழ்வு வாழ்கிறார்கள்".
இந்த சீர்திருத்தங்களை தலைமை தேர்தல் ஆணையர் மூலமாக மட்டுமே பாராளுமன்றத்திலும், அனைத்து மாநில சட்டசபைகளிலும் செய்ய முடியும்.