நினைவு தினம்

ஒட்டன்சத்திரம்:விடுதலை போராட்ட வீரர் கோபால் நாயக்கர் நினைவு தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது. விருப்பாச்சி மணி மண்டபத்தில் உள்ள அவரது உருவச்சிலைக்கு கலெக்டர் துர்கா, எம்.பி., சச்சிதானந்தம், நிலக்கோட்டை எம்.எல்.ஏ., அய்யனார் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

பழநி ஆர்.டி.ஓ., பிரபு, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ராஜசெல்வன், தாசில்தார் சண்முகம், பி.டி.ஓ.,க்கள் தாஹிரா, முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமானார் கோபால் நாயக்கரின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

Advertisement