பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டி
திருப்பாச்சேத்தி, செப்.6-–
திருப்பாச்சேத்தி அருகே செம்பராயனேந்தலில் பராமரிப்பு இல்லாத குடிநீர் தொட்டியால் கிராம மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.
கிராமப்புறங்களில் பொதுமக்களின் குடிநீர் மற்ற பயன்பாட்டிற்காக ஆழ்துளை கிணறு அமைத்து பிளாஸ்டிக் தண்ணீர் தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன. இவற்றை முறையாக பராமரிக்காததால் கழிவு நீர் வெளியேறாமல் தேங்கி பாசி படர்ந்து காணப்படுகிறது. பாசிகள் சுத்தம் செய்யப்படாததால் தண்ணீர் பிடிக்க வரும் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை வழுக்கி விழுந்து காயமடைகின்றனர்.
மேலும் குழாய்கள் சேதமடைந்து தண்ணீர் தொடர்ச்சியாக கசிந்து வீணாகி வருகிறது. செம்பராயனேந்தலில் வருட கணக்கில் குடிநீர் தொட்டி பராமரிக்கவே இல்லை . பாசி படர்ந்த தரைப்பகுதியால் தண்ணீர் பிடிக்க வரும் பெண்கள் அதிகளவில் வழுக்கி விழுந்து காயமடைகின்றனர். எனவே உள்ளாட்சி அமைப்புகள் குடிநீர் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும்.
மேலும்
-
விபத்தில் சிக்கிய எரிபொருள் டேங்கர் லாரி வெடித்தது; ஈரானில் 11 பேர் பலி
-
சென்னையின் 2வது புதிய விமான நிலையத்திற்கு 2 இடங்கள் தேர்வு
-
பொதுத் தேர்வுகளில் 100 சதவீத தேர்ச்சியுடன் ஏழை மாணவர்களின் கல்விக்கனவை நனவாக்கும் எடச்சித்துார் அரசு உயர்நிலைப் பள்ளி
-
2026ம் ஆண்டின் உலக அழகி பட்டத்தை வென்றார் டொமினிகன் நாட்டின் பெண் ஜோஹெய்ரி மோலா!
-
நிமிடத்துக்கு 16 முறை கண்களை சிமிட்டணும்!
-
அரசு பள்ளி மாணவனும் ராணுவ அதிகாரி ஆகலாம் கனவை விதைக்கும் ஓய்வு பெற்ற மேஜர் கவுரவ் மிஸ்ரா