புதிதாக 250 கிளைகள் தொடங்கப்படும்: எஸ்.பி.ஐ.,
புதுடில்லி: நடப்பு நிதியாண்டில் நாடு முழுதும் புதிதாக 250 கிளைகளை தொடங்கவும், 12,000 பணியாளர்களை நியமிக்கவும் திட்டமிட்டுள்ளதாக எஸ்.பி.ஐ., வங்கியின் தலைவர் சி.எஸ்.ஷெட்டி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
நடப்பு நிதியாண்டில் எழுத்தர்கள் மற்றும் அலுவலர்கள் ஆகிய இரு பிரிவுகளிலும் 11,000 முதல் 12,000 பேரை நியமிக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.
கடந்த 2025 - 26ம் நிதியாண்டில் 4,640 அதிகாரிகள், 19,340 உதவியாளர்கள் மற்றும் 1,653 ஒப்பந்த ஊழியர்கள் என மொத்தம் 25,633 பேர் தேர்வு செய்யப்பட்டனர். தற்போது 2.45 லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுடன் நாட்டின் மிகப்பெரிய வேலைவாய்ப்பு வழங்கிடும் நிறுவனங்களில் ஒன்றாக எஸ்.பி.ஐ., திகழ்கிறது.
புதிதாக உருவாகி வரும் குடியிருப்பு பகுதிகள் மற்றும் வர்த்தக மையங்களில் வங்கியின் சேவையை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் 200 முதல் 250 வரை புதிய கிளைகள் தொடங்கப்படும்.
இவ்வாறு தெரிவித்து உள்ளார்.
எத்தனை கிளைகள் தொடங்கினாலும் வேலை நடைபெற போவதில்லை. மக்களை அலைக்கழிப்பதில் இன்பம் காணும் ஜென்மங்கள் ஊழியர்கள்மேலும்
-
மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
-
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு
-
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
-
தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்
-
கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம்