வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு

குளித்தலை:குளித்தலை சண்முகா நகரை சேர்ந்தவர் ராஜேந்திரன், 64. யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனியில் ஓய்வு பெற்ற அலுவலர். கடந்த, 4ல் ராஜேந்திரன் வீட்டை பூட்டி விட்டு, திருச்செந்துார், குற்றாலம் சுற்றுலா சென்று விட்டு, நேற்று முன்தினம் காலை வீடு திரும்பினர்.

அப்போது வீட்டின் பின்பக்க கதவின் பூட்டை உடைத்து, உள்ளே சென்ற மர்ம நபர்கள் பீரோவில் இருந்த, 20 ஆயிரம் ரூபாயை திருடி சென்றுள்ளனர்.
குளித்தலை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

Advertisement