கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு உயர்வு; ராஜ்நாத் சிங் பெருமிதம்
கொழும்பு: கடந்த 10 ஆண்டுகளில் இந்திய பொருளாதாரம் இருமடங்கு அதிகரித்துள்ளதாக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
3 நாள் பயணமாக சென்றுள்ள அவர் நேற்று கொழும்புவில் நடந்த நிகழ்ச்சியில் பேசியதாவது; இந்திய பொருளாதாரத்தைப் பொறுத்தவரை, அது சீராக வலுவடைந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது. இந்தியாவின் பொருளாதாரம் கடந்த 10 முதல் 12 ஆண்டுகளில் இரு மடங்காக உயர்ந்துள்ளது. தற்போதைய ஜிடிபி வளர்ச்சி விகிதம் சுமார் 7.8 சதவீதமாக உள்ளது. இந்தியா உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாகவும், உலகளாவிய வளர்ச்சியில் 16 சதவீதத்திற்கும் அதிகமான பங்களிப்பை வழங்கும் முக்கிய நாடாகவும் திகழ்கிறது.
பிரதமர் மோடியின் தலைமையிலான ஆட்சியில் கடந்த 12 ஆண்டுகளில் சராசரி பணவீக்கம் 4.7 சதவீதமாகக் கட்டுப்படுத்தப்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய காங்கிரஸ் ஆட்சியில் பணவீக்கம் 10 முதல் 11 சதவீதம் வரை இருந்தது, இவ்வாறு கூறினார்.
மேலும்
-
ஈரானுக்கு உதவி செய்த 27 விமான நிறுவனங்களுக்கு அமெரிக்கா பொருளாதார தடை
-
மேற்காசியாவில் தொடரும் பதற்றம்; ஈரான் எண்ணெய் கப்பல்கள் மீது அமெரிக்கா தாக்குதல்
-
துாய்மை பணியாளர்கள் 2வது நாளாக காத்திருப்பு போராட்டம்
-
வீட்டின் பூட்டை உடைத்து ரு. 20 ஆயிரம் திருட்டு
-
அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம்
-
தேவேந்திர சேனா கல்சுரல் பவுண்டேசன் ஆர்ப்பாட்டம்