மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது; சுப்ரீம்கோர்ட் திட்டவட்டம்
புதுடில்லி: ''மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது'' என சுப்ரீம்கோர்ட் திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. கல்லூரி மாணவருக்கு நோட்டீஸ் அனுப்பிய கிரெட்டர் நொய்டா நிர்வாக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்க போவதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.
'நீட்' வினாத்தாள் கசிவு பொறுப்பேற்று மத்திய கல்வித்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜினாமா செய்ய வலியுறுத்தி, டில்லி ஜன்தர் மந்தரில் கரப்பான்பூச்சி கட்சியினர் ஜூலை மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். நாடு முழுதும் பரவிய இந்த போராட்டம் பல இடங்களில் வன்முறையாக மாறியது. போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது பல்வேறு போலீஸ் ஸ்டேஷன்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், மாணவர்கள் மற்றும் குற்றப் பின்னணி இல்லாதோர் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய உத்தரவிட்டது. ஆனாலும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் கவுதம புத்தா பல்கலைக்கழக மாணவரும், இந்திய மாணவர் சங்கத்தின் மாநில குழு உறுப்பினருமான அக்ஷத் திரிபாதி, டில்லி ஜந்தர் மந்தர் போராட்டத்தில் பங்கேற்றதற்காக கிரெட்டர் நொய்டா நிர்வாகம் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது.
இந்நிலையில் இன்று (செப் 09) சுப்ரீம்கோர்ட்டில் மூத்த வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா, டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவருக்கு கிரெட்டர் நொய்டா நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியதாக தெரிவித்தார். இது, சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை அப்பட்டமாக மீறும் வகையில் செய்யப்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
செப்டம்பர் 4ம் தேதி வழங்கப்பட்ட நோட்டீஸ் திரும்பெற்றதாக தெரிவிக்கப்பட்டது. அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டதை தெரிவித்து எந்த அதிகாரப்பூர்வ உத்தரவும் வழங்கப்படவில்லை; அந்த அறிவிப்பு திரும்பப் பெறப்பட்ட செய்தி ஊடகங்களில் மட்டுமே வெளியானது என வழக்கறிஞர் பிஸ்வஜீத் பட்டாச்சார்யா கூறினார்.
இதையடுத்து கல்லூரி மாணவருக்கு நொய்டா மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியது குறித்து கிரேட்டர் நொய்டா அதிகாரிகளிடம் விளக்கம் கேட்கப்போவதாக சுப்ரீம்கோர்ட் தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பாக்சி, மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு தெரிவித்துள்ளது.
மேலும் தலைமை நீதிபதி சூர்ய காந்த், ''இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முந்தைய உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளோம். மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது '', என்றார்.
முதல் தவறு யாரோடது?
மொத்தத்தில் உச்சநீதி மன்றம் GENZ பார்த்து கொலை நடுங்கிக்கொண்டு இருக்கிறது
any age limit?
அதில் மாணவர்கள் யார்? முதலில் அதை நீதிமன்றம் தெளிவுபடுத்த வேண்டும்.
சிறுவர், பெண்கள் வயதானவர் இந்த சமயம், இனம், மொழி சார்ந்தவர் என எந்தவிதமான பாகுபாடும் குற்றம் எய்பவருக்குத் தருவது முறையல்ல. குற்றம் செய்தவர் விசாரிக்கப்பட வேண்டும். டில்லியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற மாணவருக்கு கிரெட்டர் நொய்டா நிர்வாகம் விளக்கம் கேட்டுக் கடிதம் அனுப்பியதில் தவறேதுமில்லை மத்திய அரசின் சட்டத்துறை அமைச்சகம் என்ன செய்து கொண்டிருக்கிறது?. மோடி இன்னமும் அனுமதி தரவில்லையா? இந்தப் போராட்டங்களில் பங்கேற்ற மாணவர்கள் மீது எந்தக் குற்றவியல் நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று முந்தைய உத்தரவில் தெளிவாகக் கூறியுள்ளோம். மாணவர்கள் மீது எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கக்கூடாது என்பது தவறான கருத்து குற்றம் புரிந்தவர்கள் என அறியப்பட்டால் எவராயிருந்தாலும் விசாரிப்பதில் என்ன தவறு இப்படியே போனால் காவற்துறையும் இதர விசாரணை அமைப்புக்களும் குற்றவாளிகளுடன் "சிண்டிகேட்" அமைத்துவிடுவார்கள்
போராட்டங்களில் பங்கேற்றவர் மாணவர் தான் என்று உறுதிப்படுத்தியவர் யார் ? போலீஸ் துறை கள நிலவரம் நேரில் காணும். அதன் குற்றச்சாட்டில், பணியில் வழக்குகள் ஊடுருவல் கூடாது. என்னதான் வழக்கு பதிந்தாலும் ஆதாரம் போதாது என்று விடுவிக்கும் நிலை. போலீஸ் காயம், பொது சொத்து இழப்பு பற்றி மன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். அரசே சட்ட நடவடிக்கை எடுக்க கூடாது என்றால், ஆசிரியர் எதுவும் செய்ய முடியாது. கெஜ்ரிவால் கரப்பான் பூச்சி இடம் பார்த்து ஊறி ஊரை கெடுக்கிறது.
உண்மையாக பார்த்தால் அந்த தலைவலி நீதிபதி தான் பதவி விலக வேண்டும். மத்திய அரசு ரொம்ப அதிகமா தான் பொறுமையாக இருக்கு.
இது ஏதோ ஜனநாயக முறைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு ஏதேச்சிகார அதிகாரம்போல தோன்றுகின்றது .நாட்டின் சட்டங்கள் மற்றும் மாநில சட்டங்களையும் மீறி ஏதாவது நடந்திருந்தால் அதை விசாரித்து நீதிமன்றம் நடவடிக்கைக்கு உட்படுத்தவேண்டியாது காவல்துறை அதிகாரிகளின் கடமை .நீதிமன்றம் நடவடிக்கை என்ன என்பதை தீர்மானிப்பதும் நீதிமன்றத்தின் கடமை .நீதிமன்றம் வரும்பிது நீதிமன்றம் அவர்களை விடுவிக்கலாம் .தவறாக சட்டத்தை மீறி காவல்துறை ஏதாவது செய்திருந்தால் அவர்களுக்கு தகுந்த நிவாரணமும் நீதிமன்றம் வழங்கலாம் .தன்னிச்சையாக செயல்படவேண்டிய ஒரு துறையை அவர்களின் கடமைகளை தடுக்க நீதிமன்றத்திற்கு அதிகாரம் எங்கிருந்து வருகின்றது .இது அப்பட்டமான அதிகார எல்லை மீறல் .இதை மதியஅரசின் சட்டத்துறை நீதிமன்றத்தின் கவனத்திற்கு எடுத்துச்செல்லவேண்டும் .இதேபோன்றுதான் சாராயம் ஊழல் குற்றங்களை விசாரிக்கக்கூடாது என்று கடந்த காலங்களில் தடைவிதித்தது .இதையேயெல்லாம் நீதிமன்றத்தின் மறுபரிசீலனைக்கு மத்திய சட்டத்துறை எடுத்துரைக்கவேண்டும் .இல்லையென்றால் வருங்கலங்களில் குற்றங்களையே உரிமைகளாக மக்கள் எடுத்துக்கொள்வார்கள் .இதை மேற்கோள்காட்டி குற்றத்திலிருந்து விடுதலை கேட்பார்கள் .
ஏன் மாணவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்று நீதிமன்றம் விளக்க வேண்டும். இது ஒரு தவறான முன்னுதாரணமாக அமையக் கூடாது. அப்படியென்றால் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக போராடலாமா ? மாணவர்கள் போராட்டம் செய்வதற்கு அனுமதி அளித்துள்ளனரா ? எந்த மாணவர் அமைப்பு அனுமதி கேட்டுள்ளது ? இவர்கள் எந்த மானவர்கள் அணியில் உள்ளனர் என்று நீதிமன்றம் விலக்குமா ? நீதிமன்றமே தூண்டி விடுவது போல் இருக்கிறது.
இன்றைக்கு கரப்பான் பூச்சிகள் உருவாக காரணமே இந்த மூவரில் உள்ள ஒரு நீதியரசர்தான்.