சந்தை கணிப்புகள்: சொன்னதும், நடந்ததும்

சமீபகாலமாக இந்திய பங்கு சந்தைகள் தொடர்ந்து சரிந்து வருகின்றன. நிப்டி மேலும் சரிந்து
22,800 புள்ளிகள் வரை செல்லலாம் என்ற கணிப்பும் முதலீட்டாளர்களிடம் கவலையை ஏற்படுத்தியுள்ளது. ஆனால், கடந்த காலத்தில் சந்தைகள் பல நேரங்களில் நிபுணர்கள் மற்றும் ஆய்வு நிறுவனங்களின் கணிப்புகளுக்கு மாறாகவே செயல்பட்டுள்ளன.

எனவே, சந்தை எப்போது வீழும் அல்லது ஏறும் என்று யாருக்கும் தெரியாது என்பதை ஒப்புக்கொள்வதே சிறந்த முதலீட்டு உத்தி.

Advertisement