திமுகவை காப்பி அடிக்கும் அதிபர் டிரம்ப்; சலுகை அறிவிப்பு குறித்து ஸ்ரீதர் வேம்பு கருத்து
சென்னை: ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் வழங்கப்படும் என அதிபர் டிரம்ப் திமுகவை காப்பி அடித்து இருப்பதாக ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவிலும், நம்மூர் பாணியை பின்பற்றி, 'வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள பார்லிமென்ட் தேர்தலில் குடியரசு கட்சி வென்றால், ஒவ்வொரு குடிமகனுக்கும் தலா, 5,000 டாலர் அதாவது, 5 லட்சம் ரூபாய் வழங்கப்படும்' என்று, அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மக்கள் தொகை, 34.9 கோடியாக உள்ளது. அதில் ஓட்டளிக்க தகுதி பெற்றோர், 27 கோடி பேர். டிரம்ப்பின் அறிவிப்புபடி, 27 கோடி பேருக்கும் தலா 5,000 டாலர் வழங்கினால், அரசுக்கு 129 லட்சம் கோடி ரூபாய் செலவாகும். இது அரசுக்கு மிகப் பெரிய சுமையாகும்.
இந்த அறிவிப்பு குறித்து, ஸோகோ நிறுவனர் ஸ்ரீதர் வேம்பு வெளியிட்டுள்ள பதிவில், ''நாங்கள் இதைத் தமிழகத்தில் உருவாக்கி, இந்தியாவின் பிற பகுதிகளுக்கும் பரப்பினோம். அதிபர் டிரம்ப் தற்போது திமுகவை காப்பி அடித்துள்ளார்'' என நகைச்சுவையாக பதிவிட்டுள்ளார்.
நம்ம பிரதமர் பதினைந்து லட்சம் போட்ட மாதிரி
திராவிட மாடல் அரசுக்கு நேர்ந்த கதியே சீக்கிரம் அதிபர் டிரம்பிற்கும் நடக்கபோகிறது பிறகு உன்னாலே நான் கெட்டேன் என்னாலே நீ கெட்டாய் என்றே இருவரும் புலம்பப்போகிறார்கள் இருவருமே ஒரேமாதிரித்தான் அரசை ஆண்டுகொண்டிருக்கிறார்கள் அதில் ஆண்டு முடிந்தது இருவருமே அரசியலைவிட்டே காணாமல் போயிடுவார்கள்மேலும்
-
சொத்து, கடன் விபரங்களை தாக்கல் செய்ய அரசு அதிகாரிகளுக்கு உத்தரவு
-
உலகின் மிக முக்கிய வளர்ச்சி மையமாக திகழும் இந்தியா; ஐஎம்எப் பாராட்டு
-
ஆமதாபாத்தில் இண்டிகோ விமானம் அவசரமாக தரையிறக்கம்; பயணிகளுக்கு காத்திருந்த அதிர்ச்சி
-
'எச் - 1 பி' விசா குறித்து அதிபர் டிரம்ப் முக்கிய அறிவிப்பு; 60 நாள் சலுகை காலம் ரத்து
-
அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்
-
விவசாயியிடம் மோதிரம் பறித்த மூவருக்கு வலை