அனைத்து சங்க கூட்டமைப்பு சார்பில் ஆலோசனை கூட்டம்

கரூர்:கரூரில், அனைத்து சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், மாநகராட்சி வரி விதிப்பு தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடந்தது.
சங்க கூட்டமைப்பு தலைவர் பழனிச்சாமி தலைமை வகித்தார். கடந்த, 2021ம் ஆண்டு கரூர் மாநகராட்சி தரம் உயர்த்தப்பட்டது. இதையடுத்து, 2024ம் ஆண்டில், 24, 26, 27, 28 ஆகிய வார்டுகளில் மாநகராட்சி சொத்து வரி உயர்த்தப்பட்டுள்ளது.
தற்போது கட்டடத்தின் வாடகை வருவாயை விட வரிவிதிப்பு பல மடங்கு அதிகமாக விதிக்கப்படுகிறது. இதனை சரியான முறையில் மாற்றி தர வேண்டும் என மாநகராட்சி நிர்வாகத்திடமும், மக்கள் பிரநிதிகளிடம்புகார் மனு கொடுத்தும் பயனளிக்கவில்லை. உடனடியாக மாற்றி தரவில்லை என்றால் பேராட்டம் நடத்தப்படும் என, கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Advertisement