எம்பாப்பே 2 கோல்; செனகலை 3-1 என வீழ்த்தி பிரான்ஸ் அபார வெற்றி

3

நியூ ஜெர்சி: உலகக்கோப்பை கால்பந்து தொடரின் குரூப் 'ஐ' பிரிவு ஆட்டத்தில், பிரான்ஸ் அணி 3-1 என்ற கோல் கணக்கில், பலம் வாய்ந்த செனகல் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

​அமெரிக்காவின் நியூ ஜெர்சி மைதானத்தில் நடந்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. செனகல் அணியின் தற்காப்பு ஆட்டம், பிரான்ஸ் அணிக்கு கடும் சவாலாக இருந்தது. ​இரண்டாவது பாதியில் பிரான்ஸ் அணி தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.

​66-வது நிமிடத்தில், எம்பாப்பே ஆட்டத்தின் முதல் கோலை அடித்து, பிரான்சை முன்னிலைப்படுத்தினார். ​82வது நிமிடத்தில், பிராட்லி பார்கோலா, தனது சார்பில் ஒரு கோல் அடித்து, பிரான்சின் முன்னிலையை 2-0 என உயர்த்தினார். ஆட்டத்தின் கூடுதல் நேரத்தில்​ (90+5), செனகல் அணியின் 18 வயது இளம் வீரர் இப்ராஹிம் எம்பாயே, மிரட்டலான கோல் அடித்து பிரான்சிற்கு அதிர்ச்சியளித்தார்.

செனகல் அணி அதனை கொண்டாடி முடிப்பதற்குள், அடுத்த நிமிடத்திலேயே (90+6-வது நிமிடம்) எம்பாப்பே இப்போட்டியில் தனது 2வது கோலை அடித்து, பிரான்சின் வெற்றியை (3-1) உறுதி செய்தார். ​இந்த கோல் மூலம், எம்பாப்பே தனது 58வது சர்வதேச கோலை பதிவு செய்து, பிரான்ஸ் கால்பந்து வரலாற்றில் அதிக கோல்கள் அடித்த வீரர் என்ற சாதனை படைத்தார். மேலும், உலகக்கோப்பை வரலாற்றில், எம்பாப்பேயின் மொத்த கோல்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.