78 கிலோ புகையிலை பறிமுதல் ஒருவர் கைது: வேன் பறிமுதல்

தேவதானப்பட்டி, : பெரியகுளம் அருகே வாகன சோதனையில் வேனில் பதுக்கிய 71 கிலோ புகையிலை, 7 கிலோ போதை பாக்கினை போலீசார் கைப்பற்றினர். வேன் பறிமுதல் செய்து டிரைவர் சுலைமான் கைது செய்தனர்.

பெரியகுளம் அருகே ஜெயமங்கலம் போலீஸ் எஸ்.ஐ., முருகப்பெருமாள் போலீசாருடன் வைகை அணை ஜெயமங்கலம் ரோடு, குள்ளப்புரம் பிரிவு அருகே வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.

தேவதானப்பட்டி அருகே கெங்குவார்பட்டி வினோபா நகரைச் சேர்ந்தவர் சுலைமான் 38. ஓட்டி வந்த கேரள பதிவெண் கொண்ட வேனை சோதனையிட்டனர். இதில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 71 கிலோ போதை புகையிலை, 7 கிலோ போதை பாக்கு, பண்டல், பண்டலாக விற்பனைக்கு இருந்ததையும், வேனை போலீசார் கைப்பற்றினர். இவற்றின் மதிப்பு ரூ.1.40 லட்சம்.

ஜெயமங்கலம் போலீசார் கடத்தலில் ஈடுபட்ட சுலைமானை கைது செய்தனர்.

Advertisement