பி.எஸ்.என்.எல்., நிறுவன தின ஓவியப்போட்டி

விருதுநகர் : பி.எஸ்.என்.எல்., நிறுவன தினத்தை முன்னிட்டு விருதுநகர் கே.வி.எஸ்., மேல்நிலைப்பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கான ஓவியப்போட்டியை துணைப் பொது மேலாளர் பிரேம்சஜ் தலைமை வகித்து துவக்கி வைத்தார்.


இதில் முதல் பரிசாக ஓராண்டு இலவச பாரத் பைபர் அதிவிரைவு இணையதள இணைப்பு, இரண்டாம் பரிசிற்கு இலவச ஆறு மாத இணைப்பு, மூன்றாம் பரிசாக இலவச மூன்று மாத இணைப்பு வழங்கப்பட்டு, போட்டியில் பங்கேற்றவர்களுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.


மேலும் பாரத் பைபர் புதிய இணைப்பு பெற 1800 4444 என்ற எண்ணில் வாட்ஸ் ஆப் செய்தி அனுப்பி பதிவு செய்யலாம். முழு விவரங்களுக்கு www.bsnl.co.in என்ற இணைய முகவரியில் அறிந்து கொள்ளலாம் என துணை பொது மேலாளர் தெரிவித்துள்ளார்.

Advertisement