வாலிபரை தாக்கிய நால்வர் மீது வழக்கு

விருத்தாசலம்: விருத்தாசலத்தில் வாலிபரை தாக்கிய நால்வர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

திட்டக்குடி அடுத்த கிளிமங்கலம் கோனார் தெருவைச் சேர்ந்தவர் செழியன், 25; விருத்தாசலம் மாருதி கார் கம்பெனியில் பணிபுரிகிறார்.

கடந்த 19ம் தேதி செழியன் வேலைமுடித்து வீட்டிற்கு செல்லும் போது, குறுக்கத்தஞ்சேரி கிராமத்தைச் சேர்ந்த அன்பழகன், விருத்தாசலம் புதுப்பேட்டை மணி, அன்பரசு, ரமேஷ் ஆகியோர் வழிமறித்து தாக்கி, கொலைமிரட்டல் விடுத்தனர்.

புகாரின் பேரில், அன்பழகன், மணி உள்ளிட்ட நால்வர் மீது விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement