மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு கும்பாபிஷேகம் விமரிசை

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் ஆலடி பிள்ளையார்கோவில் தெருவில், பாலதர்ம சாஸ்தா கோவில் உள்ளது. இக்கோவிலுக்கு ஐம்பொன்னால் ஆன மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் சிலை புதிதாக செய்யப்பட்டு உள்ளது.

இச்சிலையின் கும்பாபிஷேகம் மற்றும் கலசாபிஷேகம் நேற்று நடந்தது. விழாவையொட்டி நேற்று, காலை 9:30 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, மஹா கணபதி ஹோமம், புதிதாக செய்யப்பட்ட மீனாட்சி அம்மனுக்கு லலிதா த்ரிஷதி ஹோமம், கன்னியம்மனுக்கு மூல மந்திர ஹோமம் உள்ளிட்டவை நடந்தது.

காலை 10:30 மணிக்கு பாலதர்ம சாஸ்தா ஹோமமும், காலை 11:00 மணிக்கு ஐம்பொன் மீனாட்சி அம்மனுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகமும், மதியம் 12:15 மணிக்கு பாலதர்ம சாஸ்தாவுக்கு சிறப்பு அபிஷேகமும், சந்தன காப்பு அலங்காரமும், மஹா தீபாராதனை மற்றும் அன்னதானம் நடந்தது.

மாலை 6:30 மணிக்கு மதுரை மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் மலர் அலங்காரத்தில் எழுந்தருளி வீதியுலா வந்தார்.

Advertisement