செங்குந்த மகாஜன சங்கம் கடலுாரில் முப்பெரும் விழா

கடலுார்: மாவட்ட செங்குந்த மகாஜன சங்கம் சார்பில் சங்க செயற்குழு, பொதுக்குழு மற்றும் கல்வி உதவித்தொகை வழங்கும் முப்பெரும் விழா கடலுாரில் நடந்தது.

விழாவை நிர்வாகி ஆறுமுகம் துவக்கி வைத்தார். மாவட்டத் தலைவர் ராஜவேலு தலைமை தாங்கினார். நிர்வாகிகள் ராஜன், அப்பர், ஜோதி, ராஜாமணி, ரத்தின சபாபதி முன்னிலை வகித்தனர். பொதுச் செயலாளர் கோவிந்தசாமி வரவேற்றார்.

நெய்வேலி பழனியப்பன், கடலுார் பொருளாளர் மனோகரன் ஆண்டு அறிக்கை வாசித்தனர். மாநில இளைஞர் அணி செயலாளர் அறிவழகன் உறுதிமொழி வாசித்தார்.

கூட்டத்தில் சங்க வளர்ச்சிகள், செயல்பாடுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத் தொகை வழங்கப்பட்டது.

புதுச்சேரி எம்.எல்.ஏ., ராமலிங்கம், மகளிரணி வசந்தா சுத்தானந்தம், முன்னாள் நீதிபதி ஜெகதீசன், சாரங்கபாணி, கிரீன்டெக் பள்ளி பொருளாளர் ராமலிங்கம், மாநகர செயலாளர் ராமலிங்கம், கைத்தறி சேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement