பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த அள்ளூரில் கடலுார் மேற்கு மாவட்ட பா.ஜ., உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடந்தது.

தேசிய பொதுக்குழு உறுப்பினர் முன்னாள் எம்.எல்.ஏ., அருள் தலைமை தாங்கி, உறுப்பினர் சேர்க்கை படிவத்தை வழங்கினார். முன்னாள் மாவட்ட தலைவர் தாமரைமணிகண்டன், சோழத்தரம் சேகர், மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம், கேப்டன் பாலசுப்ரமணியன், மாவட்ட துணை செயலாளர் விவேகானந்தன், திருமேனி முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில், அதிகப்படியான உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது, ஒன்றிய தலைவர்கள், கிளைத்தலைவர், உறுப்பினர்கள் என அனைவரும் பாகுபாடின்றி அயராது உழைப்பது உட்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Advertisement