காட்டு யானை பலி வனத்துறை விசாரணை

கூடலுார் : முதுமலை புலிகள் காப்பகம், மசினகுடி சீகூர் வனச்சரக வனப்பகுதியில் வன ஊழியர்கள் நேற்று முன்தினம், கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தபோது, அங்குள்ள ஆற்றில் ஆண் காட்டு யானை இறந்து கிடப்பது தெரிய வந்தது. அதன் உடலை மசினகுடி துணை இயக்குனர் அருண்குமார், வனச்சரகர் தயானந்தன் மற்றும் வன ஊழியர்கள் ஆய்வு செய்தனர். உடலை முதுமலை கால்நடை டாக்டர் ராஜேஷ்குமார் பிரேத பரிசோதனை செய்தார்.

வனத்துறையினர் கூறுகையில், 'இறந்த ஆண் யானைக்கு, 27 வயது இருக்கும். மூன்று நாட்களுக்கு முன் இறந்துள்ளது. மற்றொரு ஆண் யானையுடன் ஏற்பட்ட சண்டையில், காயங்கள் ஏற்பட்டு அதன் காரணமாக யானை உயிரிழந்துள்ளது,' என்றனர்.

Advertisement