அரசு மருத்துவமனை தூய்மை பணி

ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி அரசு மருத்துவமனை வளாகத்தில் தூய்மை பாரத இயக்கம் திட்டத்தின் கீழ்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தூய்மை பணி மேற்கொண்டனர்.

தேனி நேரு யுவகேந்திரா, கம்மவார் சங்க பாலிடெக்னிக் கல்லூரி என்.எஸ்.எஸ்., மாணவர்கள் மேற்கொண்ட ஒரு நாள் தூய்மைப்பணி முகாமை எம்.எல்.ஏ., மகாராஜன் துவக்கி வைத்தார். அரசு மருத்துவமனை டாக்டர்கள் பிரேமலதா, லதா, ஞானசுந்தரம், சித்தா டாக்டர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நேரு யுவகேந்திரா ஒருங்கிணைப்பாளர் கோகுலகிருஷ்ணன் என்.எஸ்.எஸ்., பொறுப்பாளர் செல்வகுமார், இளையோர் தொண்டர் துரைமுருகன், விவேகானந்தர் மன்ற தலைவர் மனோஜ், ஆண்டிபட்டி நகர் நல கமிட்டி தலைவர் மீனாட்சி சுந்தரம் மற்றும் என்.எஸ்.எஸ்., பணியில் பங்கேற்ற மாணவர்கள் தூய்மை பாரத இயக்க உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். மருத்துவமனை வளாகத்தில் இருந்த குப்பை, பிளாஸ்டிக் கழிவுகள் ஆகியவற்றை சேகரித்து அப்புறப்படுத்தினர்.

Advertisement