வாலிபர் தீக்குளித்து தற்கொலை 19 பேர் மீது வழக்குப் பதிவு

அவலுார்பேட்டை: மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தில் 19 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.

மேல்மலையனுார் அடுத்த கெங்கபுரத்தை சேர்ந்தவர் வரதன், 60; அதே ஊரை சேர்ந்தவர் ரங்கநாதன். இருவரின் நிலங்களும் அருகருகே உள்ளன. இருவருக்குமிடையே நிலத்தில் வழி தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.

வரதன் வைத்துள்ளது அரசு புறம்போக்கு நிலம் என கூறி ரங்கநாதன் ஆர்ப்பாட்டம் செய்யப் போவதாக பிரச்னை செய்துள்ளார்.

இதனால் வரதன் மகன் மோகன்ராஜ், 33; கடந்த 27ம் தேதி மேல்மலையனுார் தாலுகா அலுவலகத்தில் தீக்குளித்து, சிகிச்சை பலனின்றி இறந்தார்.

இது குறித்து வரதன் அளித்த புகாரின் பேரில், ரங்கநாதன், ஹரிகரகுமார், தேவராஜ், உட்பட 19 பேர் மீது வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement