கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம்

திருவள்ளூர்: ஊட்டச்சத்து உறுதி செய் திட்டத்தின் கீழ், கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்பட்டது.

ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட துறை சார்பில், ஊட்டச்சத்தை உறுதி செய் 2ம் கட்ட துவக்க விழா நேற்று திருவள்ளூரில் நடந்தது.

கலெக்டர் பிரபுசங்கர் தலைமை வகித்து, இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். பின், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் துறை சார்பாக அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை பார்வையிட்டார்.

தொடர்ந்து, கர்ப்பிணியருக்கு ஊட்டச்சத்து பெட்டகம், அடுப்பில்லா சமையல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவியருக்கு பரிசு, சிறப்பாக செயல்பட்ட அங்கன்வாடி பணியாளர்களுக்கு பதக்கம் வழங்கினார்.

நிகழ்ச்சியில், உதவி கலெக்டர் பயிற்சி ஆயுஷ் குப்தா, மாவட்ட குழந்தை வளர்ச்சி திட்ட பணி அலுவலர் லலிதா உட்பட பலர் பங்கேற்றனர்.

Advertisement